- ஸ்வர்ணலட்சுமி
உப்புமாவைப் பிடிக்காதவர்கள்தான் அதிகம்.. ஆனாலும் அதன் பெயரைக் கேட்டாலே உருகி உருகி மெய் மறந்து போபவர்களும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் விரும்பும் சூப்பரான சம்பா ரவை உப்புமா பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.. ஓடியாங்க கிச்சனுக்குள் போகலாம்.
தேவையான பொருட்கள்
சம்பா ரவை ஒரு கப்
பெரிய வெங்காயம் ஒன்று கட் செய்யவும்
பச்சை மிளகாய் இரண்டு கட் செய்யவும்
கருவேப்பிலை கொத்துமல்லி ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி ஒரு துண்டு தட்டிக் கொள்ளவும்
பூண்டு 4 தட்டிக் கொள்ளவும்
மா இஞ்சி சிறிய அளவு தட்டிக் கொள்ளவும்
கேரட் ,பீன்ஸ், உருளைக்கிழங்கு ,பச்சை பட்டாணி ஒரு கப் வேகவைத்து கொள்ளவும்
பட்டை ,லவங்கம் -தலா மூன்று
சிறிய தக்காளி ஒன்று கட் செய்யவும்
கடலை எண்ணெய் 3 ஸ்பூன்
தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு
உப்பு காரம் தேவைக்கு ஏற்ப
செய்முறை:

ஒரு அகன்ற கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பட்டை, இலவங்கம் பூ சேர்க்கவும்.
தட்டிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ,பெரிய வெங்காயம் ,தக்காளி ஒவ்வொன்றாக சேர்க்கவும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும்
உப்பு உப்பு போட்டு தண்ணீர் நன்றாக கொதி வர வேண்டும். பிறகு சம்பா ரவை சேர்க்கவும் .வேகவைத்த காய்கறிகளை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும். தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம் .
இப்பொழுது சூப்பரான, சத்தான கமகமன்னு சம்பா கோதுமை ரவை உப்புமா காய்கறிகளுடன் ரெடி. வேலைக்குச் செல்பவர்கள், குழந்தைகள் ,பெரியவர்கள் ,மற்றும் டயாபடீஸ் இருப்பவர்களுக்கு இது நல்ல பில்லிங்கான உணவு.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}