- ஸ்வர்ணலட்சுமி
உப்புமாவைப் பிடிக்காதவர்கள்தான் அதிகம்.. ஆனாலும் அதன் பெயரைக் கேட்டாலே உருகி உருகி மெய் மறந்து போபவர்களும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் விரும்பும் சூப்பரான சம்பா ரவை உப்புமா பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.. ஓடியாங்க கிச்சனுக்குள் போகலாம்.
தேவையான பொருட்கள்
சம்பா ரவை ஒரு கப்
பெரிய வெங்காயம் ஒன்று கட் செய்யவும்
பச்சை மிளகாய் இரண்டு கட் செய்யவும்
கருவேப்பிலை கொத்துமல்லி ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி ஒரு துண்டு தட்டிக் கொள்ளவும்
பூண்டு 4 தட்டிக் கொள்ளவும்
மா இஞ்சி சிறிய அளவு தட்டிக் கொள்ளவும்
கேரட் ,பீன்ஸ், உருளைக்கிழங்கு ,பச்சை பட்டாணி ஒரு கப் வேகவைத்து கொள்ளவும்
பட்டை ,லவங்கம் -தலா மூன்று
சிறிய தக்காளி ஒன்று கட் செய்யவும்
கடலை எண்ணெய் 3 ஸ்பூன்
தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு
உப்பு காரம் தேவைக்கு ஏற்ப
செய்முறை:
ஒரு அகன்ற கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பட்டை, இலவங்கம் பூ சேர்க்கவும்.
தட்டிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ,பெரிய வெங்காயம் ,தக்காளி ஒவ்வொன்றாக சேர்க்கவும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும்
உப்பு உப்பு போட்டு தண்ணீர் நன்றாக கொதி வர வேண்டும். பிறகு சம்பா ரவை சேர்க்கவும் .வேகவைத்த காய்கறிகளை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும். தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம் .
இப்பொழுது சூப்பரான, சத்தான கமகமன்னு சம்பா கோதுமை ரவை உப்புமா காய்கறிகளுடன் ரெடி. வேலைக்குச் செல்பவர்கள், குழந்தைகள் ,பெரியவர்கள் ,மற்றும் டயாபடீஸ் இருப்பவர்களுக்கு இது நல்ல பில்லிங்கான உணவு.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}