ஹைதராபாத்: குண்டூர் காரம் படத்தில் நான் பிடித்தது ஆயுர்வேத பீடி. வழக்கமான புகையிலை பீடி அல்ல.. புகை பிடிக்கும் பழக்கத்தை நான் ஆதரிக்க மாட்டேன்.. நானும் புகை பிடிக்க மாட்டேன் என்று நடிகர் மகேஷ் பாபு கூறியுள்ளார்.
சினிமாவில் சூப்பர் நடிகர்கள் புகை பிடிப்பது போல, மது அருந்துவது போல நடிக்கும்போது அது சர்ச்சையைக் கிளப்பி விடுகிறது. காரணம், அவர்களைப் பின்பற்றும் ரசிகர்களும் அதைப் பின்பற்றுவார்கள் என்பதால் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இதுபோன்ற கெட்ட பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு இதுபோன்ற கோரிக்கை அடிக்கடி வரும். அவர்களது படங்களில் இதுபோன்ற காட்சிகள் வந்தால் சர்ச்சையாகி விடுவதும் வழக்கம். இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கும் இதுபோல ஒரு சர்ச்சை வந்துள்ளது.
மகேஷ்பாபு நடிப்பில் குண்டூர் காரம் என்ற படம் சங்கராந்திக்கு வந்து பெரும் ஹிட்டாகியுள்ளது. இப்படத்தில் அவர் பீடி பிடிப்பது போன்ற காட்சிகள் வருகின்றன. இது விவாதப் பொருளாகியுள்ளது. இந்த நிலையில் அதுகுறித்து மகேஷ் பாபு விளக்கியுள்ளார்.
வழக்கமாக இதுபோன்ற காட்சிகளில் மகேஷ்பாபு நடிக்க மாட்டார் என்பதால் குண்டூர் காரம் புகை பிடிக்கும் காட்சி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மகேஷ்பாபு கூறுகையில், இந்தப் படத்தில் நான் பிடித்தது நிஜமான பீடியே அல்ல. அது ஆயுர்வேத பீடி. கிராம்பு இலைகளால் உருவாக்கப்பட்டது அது. தனிப்பட்ட முறையில் எனது உடல் நலன் குறித்து எனக்கு அக்கறை உண்டு. அதேபோலத்தான் மற்றவர்களும் உடன் நலனுடன் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவேன். எப்போதும் நான் புகை பிடிக்கவும் மாட்டேன், அந்தப் பழக்கத்தை ஆதரிக்கவும் மாட்டேன் என்று கூறியுள்ளார் மகேஷ்பாபு.
மகேஷ்பாபுவின் இந்தப் பேச்சு தெலுங்குத் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதை விட முக்கியமாக அவரது ரசிகர்கள் இதை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார்னா சும்மாவா.. பாராட்டுகள் மகேஷ்பாபு காரு!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}