சென்னை: தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் ஆலார்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. முன்பு எல்லாம் அக்னி நட்சத்திர காலத்தில் மட்டும் தான் கத்திரி வெயில் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வரும். ஆனால், இப்போது அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னரே தமிழகத்தின் பல மாவட்டங்களில் 105 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் வெயிலை தாங்க முடியாமல் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும்.
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன் எச்சரிக்கையுடன் செயல்படவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... 27ம் தேதி சேலம் இல்லைங்க.. கரூரில் மக்களை சந்திக்கிறார்
திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!
விஜயம் - ஜெயம் பேச்சு.. நான் சொன்னது ஆக்சுவல்லி மொக்கையானது.. பார்த்திபன் விளக்கம்
ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்?: அன்புமணி ராமதாஸ்!
நவராத்திரி 2025.. 9 நாள் தசரா விழாவின் சிறப்புகள்!
ஜிஎஸ்டி சீரமைப்பு அமலான முதல் நாளில்.. இந்தியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி
சவரன் ரூ. 83,000த்தை நெறுங்கும் தங்கம்... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
ஜிஎஸ்டி 2.0.. நவராத்திரியில் அமலுக்கு வந்த புதிய வரிவிகிதங்கள்.. எதெல்லாம் விலை குறையும்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 22, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் ராசிகள்
{{comments.comment}}