சென்னை: தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் ஆலார்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. முன்பு எல்லாம் அக்னி நட்சத்திர காலத்தில் மட்டும் தான் கத்திரி வெயில் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வரும். ஆனால், இப்போது அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னரே தமிழகத்தின் பல மாவட்டங்களில் 105 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் வெயிலை தாங்க முடியாமல் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும்.
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன் எச்சரிக்கையுடன் செயல்படவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!
{{comments.comment}}