சென்னை: தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் ஆலார்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. முன்பு எல்லாம் அக்னி நட்சத்திர காலத்தில் மட்டும் தான் கத்திரி வெயில் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வரும். ஆனால், இப்போது அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னரே தமிழகத்தின் பல மாவட்டங்களில் 105 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் வெயிலை தாங்க முடியாமல் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும்.
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன் எச்சரிக்கையுடன் செயல்படவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
{{comments.comment}}