சென்னை: தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் ஆலார்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. முன்பு எல்லாம் அக்னி நட்சத்திர காலத்தில் மட்டும் தான் கத்திரி வெயில் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வரும். ஆனால், இப்போது அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னரே தமிழகத்தின் பல மாவட்டங்களில் 105 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் வெயிலை தாங்க முடியாமல் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும்.
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன் எச்சரிக்கையுடன் செயல்படவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!
Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்
தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு
பிரதமர் மோடியின் 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணச் செலவு: மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
“வெற்றிப் பயணம் தொடரட்டும்!”: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?
முருக பக்தியின் மகத்துவம் பேசும் ஆடி கிருத்திகை –காவடி, பால்குடம், பக்தி பேரலை
{{comments.comment}}