அமெரிக்க - கனடா எல்லையைக் கடக்க முயன்ற .. இந்தியக் குடும்பம் மரணம்!

Apr 01, 2023,12:07 PM IST
மான்ட்ரீல்: அமெரிக்கா- கனடா இடையிலான எல்லையைக் கடக்கும் முயற்சியின்போது இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக மரணத்தைத் தழுவியுள்ளனர். அவர்களது உடல் ஒரு அடர்ந்த புதர்ப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இறந்த 8 பேரில் இந்தியக் குடும்பத்தினர் தவிர, ரோமானியா நாட்டுக் குடும்பமும் அடங்கும். அனைவருமே கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தனர். ஆனால் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றனர். உள்ளூரைச் சேர்ந்த மோஹாக் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர்தான் இவர்களை படகு மூலம் அமெரிக்காவுக்குள் அனுப்ப கூட்டி வந்துள்ளார். ஆனால் படகு பாதியிலேயே கவிழ்ந்துள்ளது. இதில் 6 பேரின்  உடல்கள் முதலில் மீட்கப்பட்டன. பின்னர் மேலும் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 8 பேரில் 6 பேர் பெரியவர்கள், 2 பேர் குழந்தைகள் ஆவர். 
 


கனடாவின் கியூபெக், ஓன்டாரியா, அமெரிக்காவின் நியூயார்க் இடையே, செயின்ட்  லாரன்ஸ் ஆற்றையொட்டிய பிராந்தியம் அக்வெஸஸ்னே மோஹாக் பிராந்தியமாக அறியப்படுகிறது. இந்த வழியாகத்தான் கனடாவிலிருந்து பலரும் ஆற்றின் மூலமாக உயிரைப் பணயம் வைத்து படகு சவாரி மூலம் நியூயார்க் பிராந்தியத்திற்குள் நுழைகின்றனர். இப்படி நுழைந்துதான் தற்போது இந்த 8 பேரும் பலியாகியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

news

டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்