அமெரிக்க - கனடா எல்லையைக் கடக்க முயன்ற .. இந்தியக் குடும்பம் மரணம்!

Apr 01, 2023,12:07 PM IST
மான்ட்ரீல்: அமெரிக்கா- கனடா இடையிலான எல்லையைக் கடக்கும் முயற்சியின்போது இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக மரணத்தைத் தழுவியுள்ளனர். அவர்களது உடல் ஒரு அடர்ந்த புதர்ப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இறந்த 8 பேரில் இந்தியக் குடும்பத்தினர் தவிர, ரோமானியா நாட்டுக் குடும்பமும் அடங்கும். அனைவருமே கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தனர். ஆனால் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றனர். உள்ளூரைச் சேர்ந்த மோஹாக் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர்தான் இவர்களை படகு மூலம் அமெரிக்காவுக்குள் அனுப்ப கூட்டி வந்துள்ளார். ஆனால் படகு பாதியிலேயே கவிழ்ந்துள்ளது. இதில் 6 பேரின்  உடல்கள் முதலில் மீட்கப்பட்டன. பின்னர் மேலும் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 8 பேரில் 6 பேர் பெரியவர்கள், 2 பேர் குழந்தைகள் ஆவர். 
 


கனடாவின் கியூபெக், ஓன்டாரியா, அமெரிக்காவின் நியூயார்க் இடையே, செயின்ட்  லாரன்ஸ் ஆற்றையொட்டிய பிராந்தியம் அக்வெஸஸ்னே மோஹாக் பிராந்தியமாக அறியப்படுகிறது. இந்த வழியாகத்தான் கனடாவிலிருந்து பலரும் ஆற்றின் மூலமாக உயிரைப் பணயம் வைத்து படகு சவாரி மூலம் நியூயார்க் பிராந்தியத்திற்குள் நுழைகின்றனர். இப்படி நுழைந்துதான் தற்போது இந்த 8 பேரும் பலியாகியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்