மும்பை: தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர் சோஹைல் கதூரியா ஆகியோருக்கு மும்பை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகப் பேசப்பட்டு வந்த இவர்களது பிரிவினை குறித்த தகவல்கள், தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
காதல் திருமணம் முதல் பிரிவு வரை :
நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது நீண்ட கால நண்பரும் தொழில் பங்குதாரருமான தொழிலதிபர் சோஹைல் கதூரியாவை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற முண்டோடா அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அப்போது வைரலாகின.
இருப்பினும், திருமணமான ஒரு சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பரஸ்பரம் பிரிந்து வாழ முடிவெடுத்த இந்தத் தம்பதியினர், விவாகரத்து கோரி மும்பையில் உள்ள பந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு :

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. விவாகரத்து நிபந்தனையாக நடிகை ஹன்சிகா எவ்விதமான ஜீவனாம்சமும் கோரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னிச்சையாகவும், சுமூகமாகவும் இந்தப் பிரிவை அவர் அணுகியுள்ளதாகத் தெரிகிறது.
திரையுலகில் பரபரப்பு :
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் கதாநாயகியாகத் தடம் பதித்த ஹன்சிகா, 'குட்டி குஷ்பு' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். விஜய், ரவி மோகன், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தத் திடீர் விவாகரத்துச் செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஹன்சிகா தனது திரையுலகப் பணிகளில் மீண்டும் தீவிரமாக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைத் தாண்டி, தனது தொழில் வாழ்க்கையில் அடுத்தகட்டத்திற்குச் செல்ல அவர் தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
சிந்தனைச் சிதறல்.. உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
tn result 2026 தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
{{comments.comment}}