சென்னை : மேகதாது அணை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு தனது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. தமிழகத்தின் விவசாயிகள் மற்றும் குடிநீர் தேவையை பாதிக்கும் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவது குறித்து தமிழக அரசு பல்வேறு சட்டப்பூர்வ மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முக்கியக் கூட்டம்:

இந்நிலையில், இன்று (31.07.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர், சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார், நீர்வளத்துறை மற்றும் சட்டத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆலோசிக்கப்படும் முக்கிய அம்சங்கள்:
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள், அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டப் போராட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களில் தமிழகத்தின் நிலையை எவ்வாறு வலுவாக எடுத்துரைப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நதிநீர் உரிமையைப் பாதுகாப்பதில் அரசு எவ்வித விட்டுக் கொடுப்புகளுக்கும் இடம் தராது என்றும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் கர்நாடகா செல்கிறாரா?
காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 03ம் தேதியன்று தமிழக முதல்வர் விஜய், கர்நாடக செல்ல உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மற்றொரு புறம் கர்நாடக அரசும் தமிழகத்திற்கு தண்ணீர் தர தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் கர்நாடகா செல்ல போகிறாரா என அமைச்சர் நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை : சட்ட மசோதா நிறைவேறியது
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
{{comments.comment}}