சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. எனப்படும் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் இந்தோனேஷியா அரசின் மிக உயரிய விருதான டத்தோ ஶ்ரீ விருதை பெற்றுள்ளார். இதற்காக திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் வில்லனாகவும், நடிகராகவும் நடித்து அசத்தியவர் நடிகர் ராதாகிருஷ்ணன். இவர் திரை உலகிற்கு வரும் முன்பு தொழிலதிபராக விளங்கியவர். வெல்கம் சிட்டி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தவர். வெற்றி விழா, வில்லுப்பாட்டுக்காரன், மணிகுயில், தங்கக்கிளி, செவந்த பொண்ணு, மஞ்சள் வெயில், எல்லாம் அவன் செயல், அவன் இவன், ஜில்லா, பாயும் புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

குறிப்பாக இவர் நடித்த ஜில்லா, எல்லாம் அவன் செயல், அவன் இவன் போன்ற படங்களின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமானவர். இதன் மூலம் இவருக்கென்று ரசிகர் பட்டாளங்கள் திரண்டனர். இவரை ரசிகர்கள் செல்லமாக ஆர்கே என்று அழைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆர் கே ராதாகிருஷ்ணன் இந்தோனேசியா மன்னரின் மிக உயரிய விருதான டத்தோ விருதை பெற்றுள்ளார். இவரின் கலை சேவையை பாராட்டி டத்தோ ஸ்ரீ டாக்டர் ராதாகிருஷ்ணன் என்ற விருதை இந்தோனேசியா அரசு அளித்துள்ளது.

இந்த விருதை எனக்கு அளித்து பெருமை தந்துள்ளார்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என ஆர்கே கூறி உள்ளார். விருது பெற்றுள்ள ஆர்.கே.வுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}