சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. எனப்படும் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் இந்தோனேஷியா அரசின் மிக உயரிய விருதான டத்தோ ஶ்ரீ விருதை பெற்றுள்ளார். இதற்காக திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் வில்லனாகவும், நடிகராகவும் நடித்து அசத்தியவர் நடிகர் ராதாகிருஷ்ணன். இவர் திரை உலகிற்கு வரும் முன்பு தொழிலதிபராக விளங்கியவர். வெல்கம் சிட்டி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தவர். வெற்றி விழா, வில்லுப்பாட்டுக்காரன், மணிகுயில், தங்கக்கிளி, செவந்த பொண்ணு, மஞ்சள் வெயில், எல்லாம் அவன் செயல், அவன் இவன், ஜில்லா, பாயும் புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

குறிப்பாக இவர் நடித்த ஜில்லா, எல்லாம் அவன் செயல், அவன் இவன் போன்ற படங்களின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமானவர். இதன் மூலம் இவருக்கென்று ரசிகர் பட்டாளங்கள் திரண்டனர். இவரை ரசிகர்கள் செல்லமாக ஆர்கே என்று அழைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆர் கே ராதாகிருஷ்ணன் இந்தோனேசியா மன்னரின் மிக உயரிய விருதான டத்தோ விருதை பெற்றுள்ளார். இவரின் கலை சேவையை பாராட்டி டத்தோ ஸ்ரீ டாக்டர் ராதாகிருஷ்ணன் என்ற விருதை இந்தோனேசியா அரசு அளித்துள்ளது.

இந்த விருதை எனக்கு அளித்து பெருமை தந்துள்ளார்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என ஆர்கே கூறி உள்ளார். விருது பெற்றுள்ள ஆர்.கே.வுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}