சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. எனப்படும் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் இந்தோனேஷியா அரசின் மிக உயரிய விருதான டத்தோ ஶ்ரீ விருதை பெற்றுள்ளார். இதற்காக திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் வில்லனாகவும், நடிகராகவும் நடித்து அசத்தியவர் நடிகர் ராதாகிருஷ்ணன். இவர் திரை உலகிற்கு வரும் முன்பு தொழிலதிபராக விளங்கியவர். வெல்கம் சிட்டி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தவர். வெற்றி விழா, வில்லுப்பாட்டுக்காரன், மணிகுயில், தங்கக்கிளி, செவந்த பொண்ணு, மஞ்சள் வெயில், எல்லாம் அவன் செயல், அவன் இவன், ஜில்லா, பாயும் புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

குறிப்பாக இவர் நடித்த ஜில்லா, எல்லாம் அவன் செயல், அவன் இவன் போன்ற படங்களின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமானவர். இதன் மூலம் இவருக்கென்று ரசிகர் பட்டாளங்கள் திரண்டனர். இவரை ரசிகர்கள் செல்லமாக ஆர்கே என்று அழைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆர் கே ராதாகிருஷ்ணன் இந்தோனேசியா மன்னரின் மிக உயரிய விருதான டத்தோ விருதை பெற்றுள்ளார். இவரின் கலை சேவையை பாராட்டி டத்தோ ஸ்ரீ டாக்டர் ராதாகிருஷ்ணன் என்ற விருதை இந்தோனேசியா அரசு அளித்துள்ளது.

இந்த விருதை எனக்கு அளித்து பெருமை தந்துள்ளார்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என ஆர்கே கூறி உள்ளார். விருது பெற்றுள்ள ஆர்.கே.வுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}