பெங்களூரு: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களை மாதத்திற்கு குறைந்தது 10 நாட்களாவது ஆபீஸுக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஒர்க் பிரம் ஹோம் நாட்களைக் குறைக்க வேண்டும் என்றும், அலுவலகத்திற்கு வருவதை அதிகரிக்க வேண்டும் என்றும் தனது அனைத்துப் பிரிவு தலைமை மூலமாக உத்தரவிட்டுள்ளது இன்போசிஸ் நிறுவனம்.
தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் ஹைபிரிட் எனப்படும் ஒர்க் பிரம் ஆபீஸ் மற்றும் ஹோம் ஆகிய இரு ஆப்ஷன்களும் நடைமுறையில் உள்ளன. ஆனால் பல ஊழியர்கள் அடிக்கடி ஒர்க் பிரம் ஹோம் எடுப்பதால் அலுவலகத்திற்கு வருவோர் குறைந்து வருவதாக தலைமை கருதியது. இதையடுத்தே தற்போதே மாதத்திற்கு 10 நாட்கள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம்.
தற்போது வருகைப் பதிவுக்காக ஒரு செயலியை தனது ஊழியர்களுக்காக வைத்துள்ளது இன்போசிஸ். மார்ச் 10ம் தேதி முதல் இந்த செயலியில் ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷன் நாட்களானது ஒதுக்கப்பட்ட நாட்கள் வரைதான் கணக்கில் வருமாம். அதற்குப் பிறகு தானாகவே அந்த ஆப்ஷன் குளோஸ் ஆகி விடும். எனவே ஊழியர்கள் அதன் பிறகு அலுவலகத்திற்கு வந்தே ஆக வேண்டும்.
புதிய நடைமுறையானது சாப்ட்வேர் என்ஜீனியர்கள், சிஸ்டம் என்ஜீனியர்கள், சீனியர் என்ஜீனியர்கள் மற்றும் கன்சல்டன்ட்ஸ் ஆகியோருக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக.,விற்கு கை கொடுக்குமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 10, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
{{comments.comment}}