பெங்களூரு: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களை மாதத்திற்கு குறைந்தது 10 நாட்களாவது ஆபீஸுக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஒர்க் பிரம் ஹோம் நாட்களைக் குறைக்க வேண்டும் என்றும், அலுவலகத்திற்கு வருவதை அதிகரிக்க வேண்டும் என்றும் தனது அனைத்துப் பிரிவு தலைமை மூலமாக உத்தரவிட்டுள்ளது இன்போசிஸ் நிறுவனம்.
தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் ஹைபிரிட் எனப்படும் ஒர்க் பிரம் ஆபீஸ் மற்றும் ஹோம் ஆகிய இரு ஆப்ஷன்களும் நடைமுறையில் உள்ளன. ஆனால் பல ஊழியர்கள் அடிக்கடி ஒர்க் பிரம் ஹோம் எடுப்பதால் அலுவலகத்திற்கு வருவோர் குறைந்து வருவதாக தலைமை கருதியது. இதையடுத்தே தற்போதே மாதத்திற்கு 10 நாட்கள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம்.

தற்போது வருகைப் பதிவுக்காக ஒரு செயலியை தனது ஊழியர்களுக்காக வைத்துள்ளது இன்போசிஸ். மார்ச் 10ம் தேதி முதல் இந்த செயலியில் ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷன் நாட்களானது ஒதுக்கப்பட்ட நாட்கள் வரைதான் கணக்கில் வருமாம். அதற்குப் பிறகு தானாகவே அந்த ஆப்ஷன் குளோஸ் ஆகி விடும். எனவே ஊழியர்கள் அதன் பிறகு அலுவலகத்திற்கு வந்தே ஆக வேண்டும்.
புதிய நடைமுறையானது சாப்ட்வேர் என்ஜீனியர்கள், சிஸ்டம் என்ஜீனியர்கள், சீனியர் என்ஜீனியர்கள் மற்றும் கன்சல்டன்ட்ஸ் ஆகியோருக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு
நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்
ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?
வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!
திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா
{{comments.comment}}