பெங்களூரு: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களை மாதத்திற்கு குறைந்தது 10 நாட்களாவது ஆபீஸுக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஒர்க் பிரம் ஹோம் நாட்களைக் குறைக்க வேண்டும் என்றும், அலுவலகத்திற்கு வருவதை அதிகரிக்க வேண்டும் என்றும் தனது அனைத்துப் பிரிவு தலைமை மூலமாக உத்தரவிட்டுள்ளது இன்போசிஸ் நிறுவனம்.
தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் ஹைபிரிட் எனப்படும் ஒர்க் பிரம் ஆபீஸ் மற்றும் ஹோம் ஆகிய இரு ஆப்ஷன்களும் நடைமுறையில் உள்ளன. ஆனால் பல ஊழியர்கள் அடிக்கடி ஒர்க் பிரம் ஹோம் எடுப்பதால் அலுவலகத்திற்கு வருவோர் குறைந்து வருவதாக தலைமை கருதியது. இதையடுத்தே தற்போதே மாதத்திற்கு 10 நாட்கள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம்.

தற்போது வருகைப் பதிவுக்காக ஒரு செயலியை தனது ஊழியர்களுக்காக வைத்துள்ளது இன்போசிஸ். மார்ச் 10ம் தேதி முதல் இந்த செயலியில் ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷன் நாட்களானது ஒதுக்கப்பட்ட நாட்கள் வரைதான் கணக்கில் வருமாம். அதற்குப் பிறகு தானாகவே அந்த ஆப்ஷன் குளோஸ் ஆகி விடும். எனவே ஊழியர்கள் அதன் பிறகு அலுவலகத்திற்கு வந்தே ஆக வேண்டும்.
புதிய நடைமுறையானது சாப்ட்வேர் என்ஜீனியர்கள், சிஸ்டம் என்ஜீனியர்கள், சீனியர் என்ஜீனியர்கள் மற்றும் கன்சல்டன்ட்ஸ் ஆகியோருக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?
விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ
{{comments.comment}}