மக்கள் தொகை பெருகிட்டே போகுது.. யாருக்குமே அக்கறை இல்லை.. என். ஆர். நாராயணமூர்த்தி கண்டனம்!

Aug 19, 2024,06:20 PM IST

டெல்லி:   நாட்டில் அவசர நிலை பிரகடனத்திற்குப் பிறகு, மக்கள் தொகை குறைப்பு குறித்து யாருமே அக்கறை காட்டாமல் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகை கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது என்று இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.


பிரக்யாராஜ் நகரில் நடந்த மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு கூறினார் நாராயணமூர்த்தி. அவரது பேச்சிலிருந்து சில துளிகள்:




மக்கள் தொகைப் பெருக்கத்தால் பல்வேறு சவால்களை நாடு சந்தித்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவது, வீட்டு வசதி என எல்லாவற்றிலுமே நமக்கு சவால்கள் அதிகரித்து வருகின்றன.


அவசர நிலை பிரகடனத்திற்குப் பிறகு இந்திய மக்கள், மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து அக்கறை காட்டாமல் உள்ளோம். இது நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் குந்தகம் ஏற்படுத்துகிறது. அதேசமயம், அமெரிக்கா, பிரேசில், சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் சிறப்பான முறையில் கையாளப்பட்டுள்ளது.


நாட்டின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக உதவுவதுதான் பொறுப்பானவர்களின் முக்கியக் கடமை. இதை கனவாகக் கொண்டு லட்சியத்துடன் செயல்பட வேண்டும். கனவு நனவாக உழைக்க வேண்டும்.


நமது தலைமுறையினர் அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு பல்வேறு தியாகங்களைச் செய்ய வேண்டும்.எனது பெற்றோர், எனது பிள்ளைகள், ஆசிரியர்கள் பல தியாகங்களைச் செய்தேன். அதுதான் என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. அதுபோலத்தான் நாமும் செய்ய வேண்டும் என்றார் நாராயணமூர்த்தி.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்