மக்கள் தொகை பெருகிட்டே போகுது.. யாருக்குமே அக்கறை இல்லை.. என். ஆர். நாராயணமூர்த்தி கண்டனம்!

Aug 19, 2024,06:20 PM IST

டெல்லி:   நாட்டில் அவசர நிலை பிரகடனத்திற்குப் பிறகு, மக்கள் தொகை குறைப்பு குறித்து யாருமே அக்கறை காட்டாமல் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகை கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது என்று இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.


பிரக்யாராஜ் நகரில் நடந்த மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு கூறினார் நாராயணமூர்த்தி. அவரது பேச்சிலிருந்து சில துளிகள்:




மக்கள் தொகைப் பெருக்கத்தால் பல்வேறு சவால்களை நாடு சந்தித்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவது, வீட்டு வசதி என எல்லாவற்றிலுமே நமக்கு சவால்கள் அதிகரித்து வருகின்றன.


அவசர நிலை பிரகடனத்திற்குப் பிறகு இந்திய மக்கள், மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து அக்கறை காட்டாமல் உள்ளோம். இது நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் குந்தகம் ஏற்படுத்துகிறது. அதேசமயம், அமெரிக்கா, பிரேசில், சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் சிறப்பான முறையில் கையாளப்பட்டுள்ளது.


நாட்டின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக உதவுவதுதான் பொறுப்பானவர்களின் முக்கியக் கடமை. இதை கனவாகக் கொண்டு லட்சியத்துடன் செயல்பட வேண்டும். கனவு நனவாக உழைக்க வேண்டும்.


நமது தலைமுறையினர் அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு பல்வேறு தியாகங்களைச் செய்ய வேண்டும்.எனது பெற்றோர், எனது பிள்ளைகள், ஆசிரியர்கள் பல தியாகங்களைச் செய்தேன். அதுதான் என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. அதுபோலத்தான் நாமும் செய்ய வேண்டும் என்றார் நாராயணமூர்த்தி.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்