- ஸ்வர்ணலட்சுமி
சென்னை : "தொழிலாளர்களின் உழைப்பின்றி சமூக மேம்பாடு சாத்தியம் இல்லை." தொழிலாளர்களின் உரிமைகள் ,நலன் மற்றும் உரிய வேலை நேரங்களை ஆதரிக்கிறது இந்த மே தினம்.
எட்டு மணி நேர வேலை நாளுக்காக நடந்த போராட்டங்களை நினைவு கூறும் வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது இந்த நாள் .1889 இல் பாரிசில் நடந்த சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில் 8 மணி நேர வேலைக்காக போராடினர் .பின்பு 18 90 இல் பல நாடுகளில் மே 1 அன்று தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டது.
வரலாறு 1886:
1886 இல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த ஹே மார்க் கட் கிளர்ச்சி மிகவும் முக்கியமானது. தொழிலாளர்கள் குறைந்தபட்ச வேலை நேரத்திற்காக போராடினர். இதில் பலர் உயிரிழந்ததும், உலகளாவிய தொழிலாளர் இயக்கத்திற்கு தூண்டுகோல் ஆனது. இந்தியாவில் முதன்முறையாக தொழிலாளர் தினம் 1923ல் சென்னையில் (முன்பு மதராஸ்) கொண்டாடப்பட்டது. இதற்கு முக்கிய பங்கு வகித்தவர் சிங்காரவேலர் ஆவார்.
சிறப்புக்கள்:

*தொழிலாளர்களின் உரிமைகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நாளாகவும் இந்த மே தினம் விளங்குகிறது.
மே தினம் தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு நாளாகவும் உள்ளது. "உழைப்பின்றி அமையாது உலகு "நல்ல வாழ்க்கை வாழ பெரும் உழைப்பை தியாகம் செய்ய வேண்டி உள்ளது .தொழிலாளர்கள் வர்க்கம் ஓடாக தேய்ந்து மாடு போல் கடும் உழைப்பு போட்டாலும் அவர்களுக்கு பலன்கள் என்று பார்த்தால் சிறிதளவு தான். அவர்களின் முதலாளிகளுக்கு பலன் முழுதும் போய் சேர்கிறது. அப்படிப்பட்ட உழைப்பாளிகளின் தியாகத்தை போற்றவும் அவர்களுடைய உரிமை குறித்த விழிப்புணர்வு ஏற்பட இந்த மே ஒன்று தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் உறக்கம், எட்டு மணி நேரம் ஓய்வு (விளையாடுவது, படிப்பது, பிற வேலைகள்) என இருந்தால்தான் மனித வாழ்க்கைக்கு அர்த்தமாக இருக்கும் என்று முன் வைத்தவர் காரல் மார்க்ஸ் .
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்:
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியது :-எந்த வேலையும் அற்பமானது அல்ல; மனிதகுலத்தை உயர்த்தும் அனைத்து உழைப்பிற்கும் கண்ணியம் உண்டு; அவை சிறப்போடு மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொழிலாளர்கள் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல; வருடம் முழுவதும் நினைத்து பாராட்டப்பட வேண்டியவர்கள்.
தொழிலாளர் சிந்திய வியர்வைத் துளி தான் கல்லாய் கடந்த பூமி பந்து கர்ப்பம் தரித்து உயிர் பிடித்திருக்கிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.
வியர்வை சிந்தும் தொழிலாளி கரங்கள் உயரட்டும் ;நாளைய உலகை வலிமையோடு ஆளட்டும்.
வீட்டை உயர்த்திட ;நாட்டை வளர்த்திட ;நாளை உருவாக, இன்றும் உழைத்திடும் உன்னத கரங்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.
கல் உடைக்கும் கரங்கள்; வெயிலில் உழைப்பவர்கள் முதல் கணினி வேலை செய்யும் குளிர்சாதன அறைக்குள் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.தென் தமிழ் சார்பாக அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?.. விஜய்க்கு அதிமுக கேள்வி
ரூ. 5000.. மகளிருக்கு காலையிலேயே சர்ப்பிரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
2024,2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முக ஸ்டாலின் அவர்களே?:எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!
மகளிர் உதவித்தொகை ரூ.2000 ஆக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம்...விஜய் சொல்லும் புதிய தகவல்
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்வு...அதிமுக மற்றும் பாஜக கடும் விமர்சனம்
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
விஜய்யின் சேலம் பேச்சு எப்படி இருக்கு?...கூட்டத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா?
திமுகவிற்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா? : தவெக தலைவர் விஜய் பேச்சு!
எகிப்து வரை கொடி கட்டிப் பறந்த தமிழ்... பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!
{{comments.comment}}