கருவறை சுமந்து
சிறையறைக்குள் அடங்கிய காலம்
கர்ப்ப கிரகத்தில் ஆராதித்த காலம்
தெய்வத்தின் மறு உருவாய்!
பூவினும் மெல்லியல் நீ
மென்மை மனம் படைத்தவள் நீ
சுவருக்குள் அடக்கிய சித்திரமாய் நீ!
சின்ன சின்ன உரிமைகள் சிந்தனையில் உதித்த பொழுது
சிறகடித்து வானம் பார்க்க புறப்பட்டாய்
உணர்வுகள் கொந்தளித்து உயிர் எழும்ப நினைத்தபொழுது
சிறகுகள் சிதறடிக்கப்பட்டன
எனக்குள்
ஒரு குரல்
உரிமைக்கு முழக்கம் கொடுக்க
மீண்டும் சிறகுகள் முளைத்தன
உதிரம் கொடுத்து உயிர் கொடுத்த மட்டுமா
உன்னுள் சாதிக்க எத்தனை எத்தனை
பெண்மைக்கு கல்வி கொடுக்க
பெருமிதம் மிளிர்ந்து பெருமை பெற்றது பெண்ணினம்
உன் கால் தடம் பதிக்காத துறைகள் இல்லை
உன் கரம் படாத தொழில்களும் இல்லை
மென்மையானவள் தான் நீ
ஆனால் தன்மானம் காப்பவள்
பனையேறியாய் நிற்பவள் நீ
மயானம் காப்பவள் நீ
விமானத்தில் பறப்பவள் நீ
உலகம் ஆழ்பவள் நீ என்று
அன்னை.. அன்பிற்குரியவளாய் எத்தனை எத்தனை அவதாரங்கள் பெண் சக்திக்கு
ஆண்டாண்டுகளாய்.. அடிமைச் சங்கிலியால்
பிணைக்கப்பட்ட காலம் கடந்து போனது
எனது பெருமைமிகு பெண்ணினம்
"விட்டு விடுதலையாகி"
வையத்தில் கோடோற்றி நிற்கின்றது!
கவிதை: அங்கயற்கண்ணி
அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!
5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!
பெண்ணாதிக்கம்!
வாடி என் வயிற்றுக்குள்ளே.!! (சிறுகதை)
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}