Women's day 2025: விட்டு விடுதலையாகி (கவிதை)

Mar 08, 2025,03:20 PM IST

கருவறை சுமந்து 

சிறையறைக்குள் அடங்கிய காலம் 

கர்ப்ப கிரகத்தில் ஆராதித்த காலம் 

தெய்வத்தின் மறு உருவாய்!

 

பூவினும் மெல்லியல் நீ 

மென்மை மனம் படைத்தவள் நீ

சுவருக்குள் அடக்கிய சித்திரமாய் நீ!


சின்ன சின்ன உரிமைகள் சிந்தனையில் உதித்த பொழுது 

சிறகடித்து வானம் பார்க்க புறப்பட்டாய்

உணர்வுகள் கொந்தளித்து உயிர் எழும்ப நினைத்தபொழுது

சிறகுகள் சிதறடிக்கப்பட்டன 




எனக்குள் 

ஒரு குரல் 

உரிமைக்கு முழக்கம் கொடுக்க 

மீண்டும் சிறகுகள் முளைத்தன


உதிரம் கொடுத்து உயிர் கொடுத்த மட்டுமா 

உன்னுள் சாதிக்க எத்தனை எத்தனை 

பெண்மைக்கு கல்வி கொடுக்க 

பெருமிதம் மிளிர்ந்து பெருமை பெற்றது பெண்ணினம் 


உன் கால் தடம் பதிக்காத துறைகள் இல்லை 

உன் கரம் படாத தொழில்களும் இல்லை 

மென்மையானவள் தான் நீ 

ஆனால் தன்மானம் காப்பவள் 


பனையேறியாய் நிற்பவள் நீ

மயானம் காப்பவள் நீ

விமானத்தில் பறப்பவள் நீ 

உலகம் ஆழ்பவள் நீ என்று 


அன்னை.. அன்பிற்குரியவளாய் எத்தனை எத்தனை அவதாரங்கள் பெண் சக்திக்கு 

ஆண்டாண்டுகளாய்.. அடிமைச் சங்கிலியால்

பிணைக்கப்பட்ட காலம் கடந்து போனது 

எனது பெருமைமிகு பெண்ணினம் 

"விட்டு விடுதலையாகி" 

வையத்தில் கோடோற்றி நிற்கின்றது!


கவிதை: அங்கயற்கண்ணி

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்