தென்றலும் புயலுமாகிய பெண்மையை போற்றுவோம்..!!

Mar 08, 2025,03:50 PM IST
- கவிஞாயிறு இரா.கலைச்செல்வி

பெண்ணே!!!

நீ...நீ...நீ...நீ....எதிர்கொண்ட 
போராட்டங்கள், சவால்கள்..!!
அவமானங்கள், மனதின் வலிகள்..!!     
                          
தூங்காத இரவுகள்,  தூங்கிய சோகங்கள் ..!!                                         
இறந்து போன உன் ஆசைகள்!! கனவுகள்!!!

யாருக்கு தெரியும்??     

இன்றைய உன் வெற்றி புன்னகை மட்டுமே!!!!
அனைவருக்கும் தெரியும்..!!

மகளிரின்  மாண்பினை கூறவார்த்தைகள் உண்டோ..!!
தனக்கெனவாழா பிறருக்கென வாழும் பெருந்தகையாள்..!!
குடும்பத்தில்  அவள்இன்றி  ஒருஅனுவும் அசையாது..!!
குடும்பத்தின் சுமைகளை சுகமாய் சுமப்பவள்..!!!
அனைவரையும் அரவணைக்கும் அன்பானவள்..!!
அவள் தாய்பாசத்திற்கு நிகர் ஏதும் உண்டோ..!!
எடுத்த காரியத்தை முடிக்கும் மகத்தான மங்கைஅவள் ..!!



வயல்வெளி முதல் விண்வெளி வரை,
சாதிக்கத் துடிக்கும் மாண்புமிகு மகளிர்..!!
உயிர் கொடுப்பவள் அவளே அன்றோ..!!!
அவள் இல்லாத வீடு ...இருண்ட காடு..!!
அவளை பூமித்தாய்என புகழ்வதும்,
மலடிஎன இகழ்வதும் ஏனோ..!!

தென்றலாய் மனதை வருடியவள். 
அநீதி கண்டால் புயலாய்  சீறிபாய்வாள்.

அன்பின் ஊற்றாய் அனைவரையும் அரவணைப்பாள்..!!
அநியாயம் நடந்தால் சிங்கமென கர்ஜனை செய்வாள்.
சாதனைகள் படைப்பதில் அவள் சளைத்தவளும் அல்ல..!!
சவால்களை சந்திப்பதில் அவள்  தயங்கியவளும் அல்ல..!!
தன் கனவுகளை வென்றெடுப்பதில் உறுதியானவள்..!! 
தன் திறமைகளால் உலகை ஏற்றம் பெற செய்திடுவாள். ..!!
தாயாய் பாசத்தை பொழிந்திடுவாள்..!!
தடைகளை உடைத்தும்  உயரே பறந்திடுவாள்..!!

மனைவியாய் அன்பை பரிமாறிடுவாள்..!!
தோழியாய்  தக்க நேரத்தில் உறுதுணையாக இருப்பாள்..!!
அவள் பெண்மையான இதயம் கொண்டவள் தான்..!!
அதே நேரம்  இரும்பைப் போல் வலிமையான மனமும் கொண்டவள்..!!
பெண் என்பவள் வெறும் அழகு சிலை அல்ல..!!
அவள் ஒரு சாதனைப் பெண் ..!.அவள் ஒரு மகாசக்தி..!!
அவள் அறிவின் ஒளி..! அவள் வீட்டின் ஒளி விளக்கு ..!!
அவள் நாட்டின் நம்பிக்கை ..! அவள் தியாகத்தின் திருவுருவம்..!!
அவள் ஒரு தசாவதாரிணி..!!
தென்றலும் புயலுமாகிய பெண்மையை போற்றுவோம்..!!

பெண்மையை  போற்றுவோம்..!!
மாண்புமிகு மகளிரை மதிப்போம்..!!
தொடர்ந்து வெற்றி பெற இந்நாளில் வாழ்த்துகிறேன்.
தென் தமிழோடு இணைந்திருக்கும் அனைத்து மகளிருக்கும் 
எனது மனம் நிறைந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 

(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்) 
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!

news

தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி

news

தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

news

தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

news

விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?

news

தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை

news

பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி

news

பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!

news

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்