ஐப்பசி மாத பெளர்ணமி.. சகல சிவாலய அன்னாபிஷேகம்.. சிவாலயங்களில் விசேஷம்!

Nov 05, 2025,12:57 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாவசு வருடம் 20 25 நவம்பர் மாதம் ஐந்தாம் நாள் புதன்கிழமை அனைத்து சிவாலயங்களிலும் ஐப்பசி மாத பௌர்ணமியும் பரணி நட்சத்திரமும் இணையும் சமயத்தில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. சிவபெருமானின் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்களுக்கு முக்தி கிடைக்கும் மேலும் தலைமுறைக்கு அன்னம் குறைவில்லாமல் இருக்கும் என்பது ஐதீகம்.


சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு அன்னப் பருக்கையிலும் சிவபெருமான் இருப்பதாக ஐதீகம்.அதனால் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்தால் ஒரு கோடி சிவலிங்கங்களை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும். ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவாலயங்களில் சமைத்த உணவு, காய்கறிகள், பழங்களால் அபிஷேகமும், அலங்காரமும் சிவபெருமானுக்கு நடைபெறு கிறது.


அஸ்வினி நட்சத்திரத்தில் அன்னாபிஷேகம் :




ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தான் சாபம் பெற்ற சந்திரனுக்கு சிவபெருமான் சாப நிவர்த்தி அளித்தார். அந்த வகையில் ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி அஸ்வினி நட்சத்திரத்தில் அன்னதானம் செய்வதற்கு சிறப்பான நட்சத்திரம் என்பதால்,ஒரு சில கோவில்களில் அஸ்வினி நட்சத்திரம் வரும் பொழுது அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.


பொதுவாக பௌர்ணமி திதியில் அன்னாபிஷேகம் நடைபெறும் என்பதனால் பௌர்ணமி திதி புதன்கிழமை நவம்பர் 5ஆம் தேதி மாலை வரை இருப்பதனால் செவ்வாய் அன்று அபிஷேகம் செய்தாலும், நவம்பர் 5ஆம் நாள் முழுவதும் அன்னாபிஷேகம் அலங்காரம் பெரும்பாலான கோவில்களில் கலையாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


சிவபெருமானின் அன்னாபிஷேக தரிசனம் கோடி புண்ணியம் என்பதனாலே "சோறு கண்ட இடம் சொர்க்கம்" எனும் பழமொழி உருவானது. சர்வ சிவாலயங்களில் சிவபெருமானுக்கு வடித்த அன்னத்தாலும், காய்கறிகளாலும் செய்திருக்கும்  

அலங்கா ரத்தை காண்பதே கண்கொள்ளாக் காட்சியாகும். அதுவே பெரும் சொர்க்கம் ஆகும்.


இந்த நாளில் சுத்தமான பச்சரிசி சாதத்தை  வடித்து, அதனை நன்றாக ஆற வைத்து, பிறகு அந்த அன்னத்தை சிவபெருமானின் லிங்கத் திருமேனி முழுவதும் சாற்றி , காய்கறிகள், பழங்கள் கொண்டு அலங்காரம் செய்வார்கள். புராணங் களும் சிவபெருமான் உலக உயிர்கள் அனைத்திற்கும் படி அளந்த தினமாக இந்த நாளை குறிப்பிடுகின்றன. சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நிகழ்வு என்பது அனைத்து பொருள்களிலும், ஒவ்வொரு அரசியலும் சிவபெருமான் பரப்பிரமமாக நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இதனை "மகா அன்னாபிஷேகம்" என்று அழைப்பார்கள்.


சிவபெருமானின் அன்னாபிஷேக அலங்காரத்தில் தரிசனம் செய்தால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி, நல் வாழ்க்கை அமையும், முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.


மேலும் இன்று திருமண நாள் மற்றும் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ்  சார்பாக நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கணவன் மனைவி – கதையும் மனையும் !

news

தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி.. 2026ல் தவெக வாகை சூடும்: விஜய்

news

துல்கர் சல்மானுக்குச் சிக்கல்..காலாவதி தேதி போடாத அரிசிவிற்ற..நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால்!

news

அபாயகரமான ஆயுதத்தைக் கையில் எடுத்த நிர்மலா சிஸ்டர் (சீதா 3)

news

நாயகன் மீண்டும் வர்றார்.. ரோபோ சங்கருக்கு மரியாதை செய்யும் சென்னை கமலா தியேட்டர்!

news

ஐப்பசி மாத பெளர்ணமி.. சகல சிவாலய அன்னாபிஷேகம்.. சிவாலயங்களில் விசேஷம்!

news

30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர்... விஜய் தமிழக மக்களின் நம்பிக்கை: புஸ்ஸி ஆனந்த்

news

கோவை மாணவி வன்கொடுமை.. 4மணிநேரம் என்ன செய்தது காவல்துறை: எடப்பாடி பழனிச்சாமி!

news

வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் தங்கம் விலை... நேற்று மட்டும் இல்லங்க... இன்று குறைவு தான்

அதிகம் பார்க்கும் செய்திகள்