- இரா. மும்தாஜ் பேகம்
வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத போது தான் கண்ணீராக வெளிப்படுகிறது உண்மையான அன்பு.
எல்லோரிடமும் சிரித்து பேசலாம் ஆனால் மனசுக்கு பிடித்தவர்களிடம் மட்டும்தான் அழுது பேச முடியும்
--
சிலர் மேல் கொண்ட அன்பில் எத்தனை முறை காயப்பட்டாலும், மூளை அறியும், ஆனால் மனம் கேட்காது அதுவே எல்லை மீறிய அன்பு
--
உண்மையான அன்பு எவ்வளவு பெரிய தவறையும் மன்னிக்கும். பொய்யான அன்பு விட்டு செல்ல காரணத்தை மட்டுமே தேடும்
--
உண்மையான அன்பு விலை போவதுமில்லை. விலை பேசுவதும் இல்லை.
விளக்கம் அளித்து விளக்கம் அளித்து அன்பை வாங்கவும் கூடாது அன்பை கொடுக்கவும் கூடாது.
--
புலிகள் வாழும் காட்டில் தான் புள்ளி மான்களும் வாழ்கின்றன பாம்பு வாழ்கின்ற கிணற்றில் தான் தவளைகளும் வாழ்கின்றன. ஆகவே துரோகிகளோடு வாழ்வதுதான் வாழ்க்கை.
--
உறவுகள் நம்மை நிராகரித்தால், அதைக் கண்டு அச்சப்பட வேண்டாம். இறைவன் நமக்கான நல்ல வழியை காட்டுகிறான் என்று வேறு வழியில் செல்ல வேண்டும். பூக்கள் பூக்க மறுப்பதால் வசந்த காலம் இல்லையென்று ஆகிவிடாது.
--
பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும். மனம் வெறுத்த பின் கிடைக்கும் அன்பும் பயனற்றது.
--
அன்பு ஒருபோதும் மாறியதில்லை. அதை கொடுப்பவர்கள் தான் அடிக்கடி மனம் மாறி விடுகிறார்கள்
(இரா.மும்தாஜ் பேகம், ஆசிரியர், கிரியேட்டிவ் ரைட்டர், திருச்சி)
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
Tamil Short Story: கைபேசி திருடிய சிறுமி!
Tamil Poem: இளமையும் காலமும்!
Tamil Poems: தனி மனிதி!
அன்பு.. எத்தனை முறை காயப்பட்டாலும், மூளை அறியும், ஆனால் மனம் கேட்காது!
Monday Motivation: வாரீர்! வாரீர்!! பிள்ளைகாள்.. இலக்கணம் எளிதே தமிழ் இலக்கணம் எளிதே!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
{{comments.comment}}