தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

Jun 13, 2026,03:53 PM IST

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களமும், கலாச்சாரமும் தினமும் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. திமுக மற்றும் அதிமுக.,வில் இருந்து பலரும் விலகி ஆளும் கட்சியான தவெக.,வில் சென்று இணைந்து வந்தனர். ஆனால் தற்போது காங்கிரஸ், பாஜக.,வை சேர்ந்த பலரும் தவெக பக்கம் சென்று இணைந்து வருகிறார்கள்.


சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 4 எம்எல்ஏ.,க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெக.,வில் சென்று இணைந்தனர். அதைத் தொடர்ந்து, அதிமுக.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இணைந்தனர். இந்நிலையில் இன்று காலை பாஜக., முன்னாள் எம்எல்ஏ விஜ யதாரணி தவெக.,வில் சென்று இணைய போவதாக தகவல் வெளியானது. ஆனால் பாஜக மட்டுமல்ல அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்தும் விலகி பலர் தவெக.,வில் சென்று இணைந்துள்ளனர். 


பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த நிகழ்வு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், அமைச்சர்கள் பலரும் கலந்த கொண்ட பெரும் நிகழ்ச்சியாகவே நடத்தப்பட்டது. பல்வேறு கட்சிகளில் இருந்து விலகும் பலரும் நேராக தவெக.,வில் சென்று இணைந்து வருகிறார்கள். ஆளும் கட்சி என்பதால் தங்களுக்கும் அங்கு ஏதாவது பதவி அல்லது பொறுப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பில் பலரும் சேர்ந்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசியலில் தவெக.,வின் பலம் அதிகரித்து வருவதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் நன்கு கவனித்து பார்த்தால் இது தவெக.,வை பலவீனப்படுத்தும் ஒரு அரசியல் வியூகம் ஆகும்.




தவெக மட்டுமின்றி எந்த ஒரு கட்சியிலும் அந்தந்த மாவட்டம் அல்லது பகுதிக்கான நிர்வாகிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு கட்சியில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டு இருக்கும். தற்போது அதே பகுதியை சேர்ந்த மாற்று கட்சியினர் வந்து இணைவதால், அவர்களுக்கும் ஏதாவது பொறுப்பு வழங்க வேண்டிய கட்டாயம், நெருக்கடி தவெக.,விற்கு ஏற்படும். 


புதியவர்களுக்கு பொறுப்பு கொடுத்தால், அது ஏற்கனவே  கட்சியில் இருப்பவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும். இதனால் கட்சிக்குள் ஒற்றுமை குறைந்து, குழப்பம் அதிகரிக்க துவங்கும். இதன் விளைவாக கட்சி பணிகளோ, தேர்தல் பணிகளோ சரியாக நடக்காது. இது தவெக.,வை மெல்ல மெல்ல பலவீனப்படுத்தும்.


தவெகவின் பெரும் பலமே முதல்வர் விஜய் மட்டும்தான். அந்த முகத்துக்காகத்தான் 108 இடங்களைக் கொடுத்துள்ளனர் தமிழ்நாட்டு மக்கள். இந்த நிலையில் பிற கட்சியினர் தவெகவில் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் தேர்தல் சீட் தருவது, பதவிகளைத் தருவது ஆகியவற்றில் பெரும் சிக்கல் வரும் என்று சொல்கிறார்கள். 

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

news

KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?

news

தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

news

டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்

news

அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

news

பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்