அதிமுக சார்பில் விருப்ப மனு  விநியோகம்.. சீட் கேட்டுக் குவிந்த பிரமுகர்கள்.. ஜெயக்குமார் மகனும் மனு!

Feb 21, 2024,05:42 PM IST

சென்னை: அதிமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு வழங்குதல் இன்று முதல் தொடங்கியுள்ளது.


இந்த விருப்ப மனுவை இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


லோக்சபா தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும், ஆலோசனை மேற்கொண்டு  வந்த வண்ணம் உள்ளனர். தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதே முனைப்புடன் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையமும் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் தேர்தலை  சுமூகமாக நடத்த  தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.




அதிமுகவுடன் சில கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் தேர்தல் குழு, பிரச்சார குழு, விளம்பர குழு, உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.


இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த விருப்ப மனுக்களை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் சீட் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார். அதேபோல பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் விருப்ப மனுவை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்