அதிமுக சார்பில் விருப்ப மனு  விநியோகம்.. சீட் கேட்டுக் குவிந்த பிரமுகர்கள்.. ஜெயக்குமார் மகனும் மனு!

Feb 21, 2024,05:42 PM IST

சென்னை: அதிமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு வழங்குதல் இன்று முதல் தொடங்கியுள்ளது.


இந்த விருப்ப மனுவை இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


லோக்சபா தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும், ஆலோசனை மேற்கொண்டு  வந்த வண்ணம் உள்ளனர். தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதே முனைப்புடன் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையமும் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் தேர்தலை  சுமூகமாக நடத்த  தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.




அதிமுகவுடன் சில கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் தேர்தல் குழு, பிரச்சார குழு, விளம்பர குழு, உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.


இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த விருப்ப மனுக்களை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் சீட் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார். அதேபோல பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் விருப்ப மனுவை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்