அதிமுக சார்பில் விருப்ப மனு  விநியோகம்.. சீட் கேட்டுக் குவிந்த பிரமுகர்கள்.. ஜெயக்குமார் மகனும் மனு!

Feb 21, 2024,05:42 PM IST

சென்னை: அதிமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு வழங்குதல் இன்று முதல் தொடங்கியுள்ளது.


இந்த விருப்ப மனுவை இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


லோக்சபா தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும், ஆலோசனை மேற்கொண்டு  வந்த வண்ணம் உள்ளனர். தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதே முனைப்புடன் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையமும் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் தேர்தலை  சுமூகமாக நடத்த  தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.




அதிமுகவுடன் சில கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் தேர்தல் குழு, பிரச்சார குழு, விளம்பர குழு, உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.


இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த விருப்ப மனுக்களை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் சீட் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார். அதேபோல பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் விருப்ப மனுவை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்