சென்னை: அதிமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு வழங்குதல் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த விருப்ப மனுவை இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும், ஆலோசனை மேற்கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதே முனைப்புடன் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையமும் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதிமுகவுடன் சில கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் தேர்தல் குழு, பிரச்சார குழு, விளம்பர குழு, உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த விருப்ப மனுக்களை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் சீட் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார். அதேபோல பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் விருப்ப மனுவை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}