- J லீலாவதி
அன்புக் குழந்தையே
உன் காலடி சத்தம் கேட்கவே
உன் கால்களுக்கு ஒரு சலங்கை
என் இரண்டு கைகளை நீட்டி
வா என்றதும் என் கைக்குள் நீ
ஆயிரம் கவலைகள் என்னுள் இருந்த போதும்
உன் முகத்தைப் பார்த்த எல்லாம் நாட்களும்
கவலை இல்லாத நாட்களே
என்னுலகம் நீ என்று
என்னை நம்பி வந்தாய்

மாறிவிட்டேன் மாற்றி விட்டேன்
என்னை உனக்காக
உன்னை சுமந்த நாள்
என் சுமையை இறக்கிய நாள்
பேசிய வார்த்தையில் நிதானமானேன்
நீ நல் வார்த்தையை கற்றுக்கொள்ள
பெரியோரை மதித்தேன்
நீயும் மதிப்பாய் என்று
நல் நூல் பல கற்றேன்
உனக்கு போதிப்பதற்காக
ஆலயம் பல சென்றேன்
ஆன்மீகம் பல நீ கற்க
அன்புக் குழந்தையே
என்னை நம்பி வந்தாய்
இனி எல்லாமும் நானே.
நான் நல்வழியில் நடக்க
என்னை பின் தொடரும் நீயும் நல்வழியில் வா
கெட்ட வார்த்தை ஒன்று உண்டோ
இல்லை
நீ கேட்ட வார்த்தையை மட்டும் தான் பேசுகிறாய்.
ஆதலால் உன்னை வளர்க்க
நான் மாறிவிட்டேன் - மாற்றி விட்டேன்.
இந்த மண்ணில் வந்த நீ
வாழ்வாங்கு வாழ்ந்து
பல நூல்களை கற்று
பதினாறு பேரும் பெற்று வாழ்வாயாக.
என் ஆசை நிறைவேற்றுவாய்
(J லீலாவதி திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர். தடம் பதிக்கும் தளிர்கள் மையமும், தென்தமிழ் இணையதளமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டிருப்பவர்)
நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?.. விஜய்க்கு அதிமுக கேள்வி
ரூ. 5000.. மகளிருக்கு காலையிலேயே சர்ப்பிரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
2024,2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முக ஸ்டாலின் அவர்களே?:எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!
மகளிர் உதவித்தொகை ரூ.2000 ஆக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம்...விஜய் சொல்லும் புதிய தகவல்
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்வு...அதிமுக மற்றும் பாஜக கடும் விமர்சனம்
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
விஜய்யின் சேலம் பேச்சு எப்படி இருக்கு?...கூட்டத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா?
திமுகவிற்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா? : தவெக தலைவர் விஜய் பேச்சு!
எகிப்து வரை கொடி கட்டிப் பறந்த தமிழ்... பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!
{{comments.comment}}