- J லீலாவதி
அன்புக் குழந்தையே
உன் காலடி சத்தம் கேட்கவே
உன் கால்களுக்கு ஒரு சலங்கை
என் இரண்டு கைகளை நீட்டி
வா என்றதும் என் கைக்குள் நீ
ஆயிரம் கவலைகள் என்னுள் இருந்த போதும்
உன் முகத்தைப் பார்த்த எல்லாம் நாட்களும்
கவலை இல்லாத நாட்களே
என்னுலகம் நீ என்று
என்னை நம்பி வந்தாய்

மாறிவிட்டேன் மாற்றி விட்டேன்
என்னை உனக்காக
உன்னை சுமந்த நாள்
என் சுமையை இறக்கிய நாள்
பேசிய வார்த்தையில் நிதானமானேன்
நீ நல் வார்த்தையை கற்றுக்கொள்ள
பெரியோரை மதித்தேன்
நீயும் மதிப்பாய் என்று
நல் நூல் பல கற்றேன்
உனக்கு போதிப்பதற்காக
ஆலயம் பல சென்றேன்
ஆன்மீகம் பல நீ கற்க
அன்புக் குழந்தையே
என்னை நம்பி வந்தாய்
இனி எல்லாமும் நானே.
நான் நல்வழியில் நடக்க
என்னை பின் தொடரும் நீயும் நல்வழியில் வா
கெட்ட வார்த்தை ஒன்று உண்டோ
இல்லை
நீ கேட்ட வார்த்தையை மட்டும் தான் பேசுகிறாய்.
ஆதலால் உன்னை வளர்க்க
நான் மாறிவிட்டேன் - மாற்றி விட்டேன்.
இந்த மண்ணில் வந்த நீ
வாழ்வாங்கு வாழ்ந்து
பல நூல்களை கற்று
பதினாறு பேரும் பெற்று வாழ்வாயாக.
என் ஆசை நிறைவேற்றுவாய்
(J லீலாவதி திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர். தடம் பதிக்கும் தளிர்கள் மையமும், தென்தமிழ் இணையதளமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டிருப்பவர்)
சென்னை சூப்பர் கிங்ஸை.. 13 ஓவர்களிலேயே நசுக்கி எடுத்து.. பெரும் வெற்றியைத் தட்டிய ராஜஸ்தான்
ரூ.14.20 கோடி கார்த்திக் சர்மா.. பொசுக்கென்று ஜோலியை முடித்த ரூ. 30 லட்சம்!
Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!
CSK in Trouble: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. கடும் அப்செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள
எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்
தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!
தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!
போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்
{{comments.comment}}