ஆசை

Apr 04, 2026,02:03 PM IST

- கவி.கலை 

 

அரவணைப்பு வார்த்தையில் மட்டுமல்லாமல் 

அரவணைக்கும் கரமாகிட ஆசை! 

ஆதரவு வெறும் சொல்லில் மட்டுமல்லாமல் 

செயலில் வெளிப்பட ஆசை! 

இன்பம் முகத்தில் மட்டும் மலராமல்  

இகமெல்லாம் மலர்ந்திட ஆசை !  


ஈரம் நிலத்தில் மட்டும் எதிர்பாராமல்  

மனதிலும் நிறைந்திட ஆசை? 

உறவுகளைத் தினம் ஏங்கித் தேடாமல் 

உண்மை உறவாகிட ஆசை !            

ஊமையாக இருந்து விடாமல்  

உறுதியாக உரைத்திட ஆசை !  


எண்ணிய தெல்லாம் எனதாக இல்லாமல்  

எளியவருக்காய் வழங்கிட ஆசை! 

ஏமாற்றம் பல நான் கண்டாலும்                     

ஏற்றம் காணும் மனம் பெற ஆசை!  




ஐயம் இருந்தாலும் அகமெல்லாம்  

உயர்வான எண்ணம் நிலைபெற ஆசை ! 

ஒடுக்கும் கைகள் ஒதுக்கினாலும் 

ஓரம் ஒதுங்கிய ஓடமாகாமல்  

ஓங்கிய கைகளாய் நீதி நிலைநாட்டிட ஆசை!


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?

news

விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு

news

நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்

news

உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!

news

செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!

news

பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?

news

பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!

news

சரியான முடிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்