- கவி.கலை
அரவணைப்பு வார்த்தையில் மட்டுமல்லாமல்
அரவணைக்கும் கரமாகிட ஆசை!
ஆதரவு வெறும் சொல்லில் மட்டுமல்லாமல்
செயலில் வெளிப்பட ஆசை!
இன்பம் முகத்தில் மட்டும் மலராமல்
இகமெல்லாம் மலர்ந்திட ஆசை !
ஈரம் நிலத்தில் மட்டும் எதிர்பாராமல்
மனதிலும் நிறைந்திட ஆசை?
உறவுகளைத் தினம் ஏங்கித் தேடாமல்
உண்மை உறவாகிட ஆசை !
ஊமையாக இருந்து விடாமல்
உறுதியாக உரைத்திட ஆசை !
எண்ணிய தெல்லாம் எனதாக இல்லாமல்
எளியவருக்காய் வழங்கிட ஆசை!
ஏமாற்றம் பல நான் கண்டாலும்
ஏற்றம் காணும் மனம் பெற ஆசை!

ஐயம் இருந்தாலும் அகமெல்லாம்
ஒடுக்கும் கைகள் ஒதுக்கினாலும்
ஓரம் ஒதுங்கிய ஓடமாகாமல்
ஓங்கிய கைகளாய் நீதி நிலைநாட்டிட ஆசை!
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)
உலகம் காட்டும் பாதையில் செல்லாமல் நம் பாதையை தேர்ந்தெடுப்போம்
எது அழகு?
நிழல் தாங்கிய அம்மா.. நினைவில் இருக்கும் அப்பா.. கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை!
மதுரை Rapido ஆட்டோ சேவையில் கட்டண குழப்பம்.. ஆப் காட்டிய கட்டணம் ஒன்று.. டிரைவர் கேட்பது வேறு!
மறக்கக் கூடாத.. கடந்த காலம்.. The Past!
மஞ்சணத்தி பூவே இளம் பிஞ்சு குருவிகளே
ஆசை
குலாப் ஜாமுன்.. கேட்டதுமே எச்சில் ஊறும்.. இது ராஸ் அல் கைமா ஸ்டைல்!
விதையில்லாமல் விளையும் பொருள் தெரியுமா?.. அட.. இது இல்லாம சாப்பிடவே முடியாதே!
{{comments.comment}}