- கவி.கலை
அரவணைப்பு வார்த்தையில் மட்டுமல்லாமல்
அரவணைக்கும் கரமாகிட ஆசை!
ஆதரவு வெறும் சொல்லில் மட்டுமல்லாமல்
செயலில் வெளிப்பட ஆசை!
இன்பம் முகத்தில் மட்டும் மலராமல்
இகமெல்லாம் மலர்ந்திட ஆசை !
ஈரம் நிலத்தில் மட்டும் எதிர்பாராமல்
மனதிலும் நிறைந்திட ஆசை?
உறவுகளைத் தினம் ஏங்கித் தேடாமல்
உண்மை உறவாகிட ஆசை !
ஊமையாக இருந்து விடாமல்
உறுதியாக உரைத்திட ஆசை !
எண்ணிய தெல்லாம் எனதாக இல்லாமல்
எளியவருக்காய் வழங்கிட ஆசை!
ஏமாற்றம் பல நான் கண்டாலும்
ஏற்றம் காணும் மனம் பெற ஆசை!

ஐயம் இருந்தாலும் அகமெல்லாம்
ஒடுக்கும் கைகள் ஒதுக்கினாலும்
ஓரம் ஒதுங்கிய ஓடமாகாமல்
ஓங்கிய கைகளாய் நீதி நிலைநாட்டிட ஆசை!
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)
TVK MLAs.. எம்எல்ஏக்கள்.. இந்திய அளவில் தவெகவுக்கு 5வது இடம்.. அசத்திய விஜய்!
அதிமுக.,வில் திக்...திக்...இபிஎஸ்.,க்கு 80 பேர் ஆதரவு...அடுத்து என்ன நடக்கும்?
திருந்தி வந்த ஓபிஎஸ்ஸை சேர்க்க மறுத்தார் இபிஎஸ்.. சி.வி.சண்முகம் காட்டம்
'கருப்பு' பட சர்ச்சை: இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்தது ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’!
Summer special Mango Icecream.. மாம்பழ ஐஸ்க்ரீ்ம்.. கேட்கவே ஸ்வீட்டா இருக்குல்ல!
வைகாசி விசாகத் திருவிழா .. விமரிசையாக தயாராகும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
மேம்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. அவளின் (ல்) அவன்! (16)
Tamil Short Story: 10 ரூபாய்க்கு 13 லட்சம்!
Everything is better when you decide.. கவலையை தூக்கி எறிங்க.. வாழ்க்கை அழகாய்ரும்!
{{comments.comment}}