ஆசை

Apr 04, 2026,02:03 PM IST

- கவி.கலை 

 

அரவணைப்பு வார்த்தையில் மட்டுமல்லாமல் 

அரவணைக்கும் கரமாகிட ஆசை! 

ஆதரவு வெறும் சொல்லில் மட்டுமல்லாமல் 

செயலில் வெளிப்பட ஆசை! 

இன்பம் முகத்தில் மட்டும் மலராமல்  

இகமெல்லாம் மலர்ந்திட ஆசை !  


ஈரம் நிலத்தில் மட்டும் எதிர்பாராமல்  

மனதிலும் நிறைந்திட ஆசை? 

உறவுகளைத் தினம் ஏங்கித் தேடாமல் 

உண்மை உறவாகிட ஆசை !            

ஊமையாக இருந்து விடாமல்  

உறுதியாக உரைத்திட ஆசை !  


எண்ணிய தெல்லாம் எனதாக இல்லாமல்  

எளியவருக்காய் வழங்கிட ஆசை! 

ஏமாற்றம் பல நான் கண்டாலும்                     

ஏற்றம் காணும் மனம் பெற ஆசை!  




ஐயம் இருந்தாலும் அகமெல்லாம்  

உயர்வான எண்ணம் நிலைபெற ஆசை ! 

ஒடுக்கும் கைகள் ஒதுக்கினாலும் 

ஓரம் ஒதுங்கிய ஓடமாகாமல்  

ஓங்கிய கைகளாய் நீதி நிலைநாட்டிட ஆசை!


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்