Kalaiyarasi Muthuvel Poems: உள்ளம்.. முகமூடியும் மாறுபட்ட வேஷங்களும்!

May 12, 2026,04:10 PM IST

- கலை கவி


கவிஞர் - ஆசிரியர் சொ. கலையரசி எழுதிய இரு அழகிய கவிதைகள் உங்கள் வாசிப்புச் சுவைக்கு...


மனம் மலர மறுத்து  

முகம் மலரும் தருணம்  

அகம் முழுதும் வெறுத்து 

இகம் மகிழும் தருணம்  

போலியாக நடித்து  

பெருமை சேர்க்கும் தருணம்  

பொய்யாகப் பேசி அதை  

மெய்யாக்கும் தருணம் 

உண்மை முகம் மூடிக் கொள்வதை விட 

உண்மை முகமே முகமூடியாக இருந்துவிடலாம். 

ஒரே முகத்துடன் எந்நாளும்.



\

மாறுபட்ட வேஷங்கள் 

 

நாடக மேடையில் கதாப்பாத்திரங்கள்  

நிஜமாகிட போடும் வேஷம் ! 

 

வாழ்கை மேடையில் நிஜத்தினை மறைக்க  

நிழலாகப் போடும் வேஷம் ! 

 

வேஷங்கள் மாறுபடலாம் 

வேதனைகள் மாறாது. 

 

நிலைமை மறைக்கப்படலாம். 

நிதர்சனம் மறையாது.


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்