புதிதாக 1.48 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. வந்தது செம அப்டேட்!

Jun 27, 2024,05:42 PM IST
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல்  மேல்முறையீடு செய்த 1.48லட்சம் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயடைந்து வருகின்றனர். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகள் புதிதாகக் கண்டறியப்பட்டனர்.

இதனையடுத்து ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்ந்து மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதி தமிழ்நாடு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், பயன்பெரும் மகளிர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில், சட்டசபையில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறையினர் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024-2025ம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1.15 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. 

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தபின் 30 நாட்களுக்குள் இ சேவை மையம் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தபின் 30 நாட்களுக்குள் இ சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்