சென்னை : உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நடிகர் ரோபோ சங்கருக்கு நடிகரும் எம்.பி.,யுமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் இருங்கல் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே."
என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரோபோ சங்கர், கமல்ஹாசனின் தீவிர ரசிகர். சமீபத்தில் தனது மகள் இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, தனது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையுடன் சென்று கமலை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது கமல், ரோபோ சங்கரின் பேரனுக்கு நட்சத்திரன் என பெயரிட்டார். இதை மகிழ்ச்சியுடன், போட்டோவுடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோபோ சங்கரும், அவரது மகள் இந்திராஜாவும் பகிர்ந்திருந்தனர்.
ரோபோ சங்கர் மறைவுக்கு முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்: சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}