சென்னை: ராகுல் காந்திக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மோடி என்ற துணைப் பெயருடன் கூடியவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி பேசியிருந்தார். இதையடுத்து குஜராத் பாஜக முன்னாள் அமைச்சர் பூர்னேஷ் மோடி என்பவர், சூரத் கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
அவதூறு வழக்கு விசாரணையின்போது மன்னிப்பு கேட்கிறீர்களா என்று கோர்ட் கேட்டபோது அதை நிராகரித்து விட்டார் ராகுல் காந்தி. இந்த நிலையில் அவருக்கு நேற்று 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. இது பெருத்த சர்ச்சையயும், விவாதத்தையும் எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு திமுக, ஆம் ஆத்மி கட்சி, ராஷ்டிரிய ஜனதாதளம், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தீர்ப்பு நியாயமல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோதோ யாத்திரையில் கலந்து கொண்டு டெல்லியில் ராகுல்காந்தியுடன் நடந்து சென்றார். அவருடன் பொதுக்கூட்டத்திலும் பேசினார். தற்போது ராகுல் காந்திக்கு எதிராக வந்துள்ள தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவிக்கையில், ராகுல்ஜி, நான் இந்த நெருக்கடியான நேரத்தில் உங்களுடன் இருக்கிறேன். பல சோதனைகளையும், அநீதியான தருணங்களையும் நீங்கள் பலமுறை சந்தித்துள்ளீர்கள். நமது நீதி பரிபாலமானது, தான் செய்யும் தவறுகளை தானே திருத்திக் கொள்ளும் வல்லமை படைத்தது. நீதி வழங்கும்போது நடைபெறும் தவறுகளையும் அது சரி செய்து கொள்ளும். உங்களுக்கும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். உங்களது மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்று கூறியுள்ளார் கமல்ஹான்
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}