கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் சமீபத்தில் சுற்றுலா பயணிகளுக்காக கட்டப்பட்டது தான் இந்த கண்ணாடி நடைபாலம். இப்பாலம் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பாலத்தில் நடந்து சென்றவாறு கீழே உள்ள கடல் அழகை ரசிக்கும் விதத்தில் அமைந்திருப்பது தான் இதன் தனிச்சிறப்பு.
இந்தியாவிலேயே முதல்முறையாக கண்ணாடிப் பாலம் இங்கு அமைக்கப்பட்டு கடந்தாண்டு இறுதியில் திறக்கப்பட்டது. இந்த பாலத்தை கண்பதற்கு சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், இந்த கண்ணாடி பாலம் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த 15ம் மூடப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் கண்ணாடி பாலம் 4 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தொடரும் மழை... இன்றும் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு... வானிலை மையம்!
தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
Trump Tax: அமெரிக்காவை ஆட்டம் காண வைக்க நம்மால் முடியாதா.. நாம் என்ன செய்ய வேண்டும்?
உருவானது வெர்டிஸ் நாடு.. 20 வயது இளைஞரின் அதிரடி.. ஆனால் இது கைலாசா மாதிரி கிடையாது!
கொள்ளிடத்தில்..தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
இலங்கை படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்
நான் உழைத்து உருவாக்கிய கட்சியை கொடுத்து விட்டு டம்மியாக இருக்க முடியாது: டாக்டர் ராமதாஸ்!
வரலட்சுமி விரதம் 2025.. லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து விரதம் இருப்போம்!
சாமியார் வேடத்தில் மனைவியைத் தேடி வந்த கணவர்.. அடுத்து நடந்த அதிரடி.. அடக் கொடுமையே!
{{comments.comment}}