சென்னை : கேரளாவில் மத வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் சோதனையை தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் மத வழிபாட்டு தலத்தில் டிபன் பாக்ஸ் குண்டுவெடித்தது. ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குண்டுவெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் நீல நிற கார் ஒன்று அங்கிருந்து புறப்பட்டு சென்றது தெரிய வந்துள்ளது. நீல நிற காரில் சென்றவர்கள் யார், அவர்களுக்கும் குண்டுவெடிப்பிற்கும் என்ன தொடர்பு என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கேரளாவின் எல்லையை ஒட்டிய தமிழக மாவட்டங்களான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தமிழக போலீசாருடன் வனத்துறையும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}