சென்னை : கேரளாவில் மத வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் சோதனையை தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் மத வழிபாட்டு தலத்தில் டிபன் பாக்ஸ் குண்டுவெடித்தது. ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குண்டுவெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் நீல நிற கார் ஒன்று அங்கிருந்து புறப்பட்டு சென்றது தெரிய வந்துள்ளது. நீல நிற காரில் சென்றவர்கள் யார், அவர்களுக்கும் குண்டுவெடிப்பிற்கும் என்ன தொடர்பு என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கேரளாவின் எல்லையை ஒட்டிய தமிழக மாவட்டங்களான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தமிழக போலீசாருடன் வனத்துறையும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}