சென்னை : கேரளாவில் மத வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் சோதனையை தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் மத வழிபாட்டு தலத்தில் டிபன் பாக்ஸ் குண்டுவெடித்தது. ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குண்டுவெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் நீல நிற கார் ஒன்று அங்கிருந்து புறப்பட்டு சென்றது தெரிய வந்துள்ளது. நீல நிற காரில் சென்றவர்கள் யார், அவர்களுக்கும் குண்டுவெடிப்பிற்கும் என்ன தொடர்பு என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கேரளாவின் எல்லையை ஒட்டிய தமிழக மாவட்டங்களான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தமிழக போலீசாருடன் வனத்துறையும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தொடங்கிய SSLC பொதுத்தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
பெண்ணாக இருப்பதே பெருமை.. The Pride of Being a Woman (Short Story)
பத்தாம் வகுப்பு மாணவர்களே.. இம்புட்டு விஷயம் உங்களுக்கு இருக்கு.. ரிலாக்ஸா இருங்க!
சிறிய கசிவும் கப்பலை மூழ்கடிக்குமா? .. கேட்டதுமே குழம்புதுல்ல.. வாங்க தெரிஞ்சுக்குவோம்!
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
{{comments.comment}}