சென்னை : தமிழ்நாட்டில் முக்கிய துறைகளை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமானது. அந்த வகையில் தற்போது சில முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்துள்ளது. மருத்துவத்துறை செயலாளராக சுப்ரியா சாஹு நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக இடமாற்றம் மற்றும் நியமனம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் விபரம் :

* சுற்றுலாத்துறை, இந்து அறநிலையத்துறை செயலாளர் - சந்திரமோகன்
* நெடுஞ்சாலைத்துறை செயலாளர் - செல்வராஜ்
* மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் - சுப்ரியா சாகு
* கூடுதல் தலைமைச் செயலாளர் பொதுப்பணித்துறை - மங்கத் ராம் சர்மா
* நீர்வளத்துறை செயலாளர் - மணி வாசன்
* உயர்கல்வித்துறை செயலாளர் - பிரதீப் யாதவ்
* ஊரக வளர்ச்சி துறை செயலாளர் - ககன் தீப் சிங் பேடி
* சுற்றுச்சூழல் துறை செயலாளர் - செந்தில் குமார்
* சமூக பாதுகாப்பு இயக்குனர் - ஜான் லூயிஸ்
* இந்திய மருந்து கழக இயக்குனர் - விஜயலட்சுமி
* வரலாற்று ஆய்வுத்துறை கமிஷனர் - வெங்கடாசலம்
* நில சீரமைப்பு துறை கமிஷனர் - ஹரிஹரன்
* போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் - லில்லி
இடமாற்றங்களையும், புதிய நியமனங்களையும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அறிவித்துள்ளார்.
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
{{comments.comment}}