சென்னை : தமிழ்நாட்டில் முக்கிய துறைகளை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமானது. அந்த வகையில் தற்போது சில முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்துள்ளது. மருத்துவத்துறை செயலாளராக சுப்ரியா சாஹு நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக இடமாற்றம் மற்றும் நியமனம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் விபரம் :

* சுற்றுலாத்துறை, இந்து அறநிலையத்துறை செயலாளர் - சந்திரமோகன்
* நெடுஞ்சாலைத்துறை செயலாளர் - செல்வராஜ்
* மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் - சுப்ரியா சாகு
* கூடுதல் தலைமைச் செயலாளர் பொதுப்பணித்துறை - மங்கத் ராம் சர்மா
* நீர்வளத்துறை செயலாளர் - மணி வாசன்
* உயர்கல்வித்துறை செயலாளர் - பிரதீப் யாதவ்
* ஊரக வளர்ச்சி துறை செயலாளர் - ககன் தீப் சிங் பேடி
* சுற்றுச்சூழல் துறை செயலாளர் - செந்தில் குமார்
* சமூக பாதுகாப்பு இயக்குனர் - ஜான் லூயிஸ்
* இந்திய மருந்து கழக இயக்குனர் - விஜயலட்சுமி
* வரலாற்று ஆய்வுத்துறை கமிஷனர் - வெங்கடாசலம்
* நில சீரமைப்பு துறை கமிஷனர் - ஹரிஹரன்
* போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் - லில்லி
இடமாற்றங்களையும், புதிய நியமனங்களையும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அறிவித்துள்ளார்.
மூத்த தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்கும் விஜய்.. தமிழகத்தில் உருவாகும் புதிய அரசியல் டிரெண்ட்
JCD Prabhakar: தமிழகத்தின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு.. துணை சபாநாயகரானார் விஜய் சங்கர்
தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்
N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?
'உளமாற உறுதி ஏற்கிறேன்' இந்த சொல்லின் வரலாறு தெரியுமா?
கணினி அறிவியல் பாடத்திற்காக வந்த நிதியில் மோசடி.. பட்டதாரி ஆசிரியர்கள் பரபரப்புப் புகார்!
சிந்தனைச் சிதறல்.. ஆணவம் அறிய விடாமல் நம்மைக் கெடுக்கும்
Proverb: தாயைப் பார்த்து பெண்ணை கொள், பாலை பார்த்து பசுவைக் கொள்!
ஆசையில பாத்திகட்டி!
{{comments.comment}}