தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மருத்துவத் துறை செயலாளராக சுப்ரியா சாஹு நியமனம்

Jul 01, 2024,05:35 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் முக்கிய துறைகளை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.


நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள்  இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமானது. அந்த வகையில் தற்போது சில முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்துள்ளது. மருத்துவத்துறை செயலாளராக சுப்ரியா சாஹு நியமிக்கப்பட்டுள்ளார்.


புதிதாக இடமாற்றம் மற்றும் நியமனம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் விபரம் :




* சுற்றுலாத்துறை, இந்து அறநிலையத்துறை செயலாளர் - சந்திரமோகன்

* நெடுஞ்சாலைத்துறை செயலாளர் - செல்வராஜ்

* மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் - சுப்ரியா சாகு

* கூடுதல் தலைமைச் செயலாளர் பொதுப்பணித்துறை - மங்கத் ராம் சர்மா

* நீர்வளத்துறை செயலாளர் - மணி வாசன்

* உயர்கல்வித்துறை செயலாளர் - பிரதீப் யாதவ்

* ஊரக வளர்ச்சி துறை செயலாளர் - ககன் தீப் சிங் பேடி

* சுற்றுச்சூழல் துறை செயலாளர் - செந்தில் குமார்

* சமூக பாதுகாப்பு இயக்குனர் - ஜான் லூயிஸ்

* இந்திய மருந்து கழக இயக்குனர் - விஜயலட்சுமி

* வரலாற்று ஆய்வுத்துறை கமிஷனர் - வெங்கடாசலம்

* நில சீரமைப்பு துறை கமிஷனர் - ஹரிஹரன்

* போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் - லில்லி


இடமாற்றங்களையும், புதிய நியமனங்களையும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்