சென்னை : தமிழ்நாட்டில் முக்கிய துறைகளை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமானது. அந்த வகையில் தற்போது சில முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்துள்ளது. மருத்துவத்துறை செயலாளராக சுப்ரியா சாஹு நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக இடமாற்றம் மற்றும் நியமனம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் விபரம் :

* சுற்றுலாத்துறை, இந்து அறநிலையத்துறை செயலாளர் - சந்திரமோகன்
* நெடுஞ்சாலைத்துறை செயலாளர் - செல்வராஜ்
* மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் - சுப்ரியா சாகு
* கூடுதல் தலைமைச் செயலாளர் பொதுப்பணித்துறை - மங்கத் ராம் சர்மா
* நீர்வளத்துறை செயலாளர் - மணி வாசன்
* உயர்கல்வித்துறை செயலாளர் - பிரதீப் யாதவ்
* ஊரக வளர்ச்சி துறை செயலாளர் - ககன் தீப் சிங் பேடி
* சுற்றுச்சூழல் துறை செயலாளர் - செந்தில் குமார்
* சமூக பாதுகாப்பு இயக்குனர் - ஜான் லூயிஸ்
* இந்திய மருந்து கழக இயக்குனர் - விஜயலட்சுமி
* வரலாற்று ஆய்வுத்துறை கமிஷனர் - வெங்கடாசலம்
* நில சீரமைப்பு துறை கமிஷனர் - ஹரிஹரன்
* போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் - லில்லி
இடமாற்றங்களையும், புதிய நியமனங்களையும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அறிவித்துள்ளார்.
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்டா புயல்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!
{{comments.comment}}