நாடாளுமன்ற மரபுகளை மீறுகிறார் ராகுல் காந்தி...கிரண் ரிஜிஜு கடும் விமர்சனம்

Feb 11, 2026,05:12 PM IST
புதுடெல்லி: முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதிய புத்தகம் தொடர்பான சர்ச்சைகள் இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களின் செயல்பாடுகளை விமர்சித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதிய புத்தகம் ஒன்றில் பாதுகாப்பு துறை சார்ந்த முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்த புத்தகத்தை வெளியிட மத்திய பாதுகாப்புத்துறை அனுமதி வழங்கவில்லை. அந்த புத்தகத்தின் ஒரு பிரதி கூட அச்சிடப்படவோ அல்லது டிஜிட்டல் வடிவமாகவோ வெளியிடப்படவில்லை என அந்த புத்தகத்தை அச்சிட்டு, வெளியிடும் காப்புரிமம் பெற்ற நிறுவனம் கூறுகிறது. ஆனால் அந்த புத்தகத்தை கையில் வைத்துள்ள ராகுல் காந்தி, அதில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் குறித்து மத்திய அரசை கேள்வி கேட்டு வருகிறார். 



ஒரு பிரதி கூட அச்சிடப்படாத ஒரு புத்தகம் எப்படி ராகுல் காந்திக்கு கிடைத்தது என மத்திய பாதுகாப்புத்துறை கேள்வி எழுப்பி வருகிறது. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான ஒரு விஷயத்தை, ராகுல் காந்தி தனது சுய லாபத்திற்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் தவறான முறையில் பயன்படுத்துவதாக அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். தேசப் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ராணுவ மற்றும் அரசாங்க ரீதியிலான ரகசியங்கள் குறித்து பேசிய ரிஜிஜு, ராணுவ தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான உரையாடல்கள், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சருக்கு இடையிலான ரகசியத் தொடர்புகள், இவை அனைத்தும் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டால், நாட்டின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இத்தகைய ரகசியத் தகவல்களை அரசியல் மேடைகளுக்கு இழுப்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு உகந்ததல்ல என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் காந்தி தொடர்ந்து நாடாளுமன்ற மரபுகளை மீறி வருவதாகவும், சபையின் மாண்பைக் காக்க வேண்டிய சபாநாயகரை அவமதிக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் இருப்பதாகவும் அமைச்சர் சாடியுள்ளார். சபாநாயகரை அவமதிப்பது ஜனநாயக முறைப்படி துரதிர்ஷ்டவசமானது என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ராணுவ தளபதியின் புத்தகக் குறிப்புகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த காட்டமான பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings vs RR: முன்னாள் அணிகளுக்கு எதிராக களம் இறங்கும் சஞ்சு சாம்சன், ஜடேஜா!

news

DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு

news

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.. திமுக தேர்தல் வாக்குறுதி

news

C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!

news

234 தொகுதிகளிலும் தவெக தனி ஆவர்த்தனம்.. வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!

news

Thiruvarur Aazhi Ther: திருவாரூர் தேர் – பலர் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்!

news

புனித வாரம் தொடங்கியது.. தமிழ்நாடு முழுவதும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

news

திருவாரூரில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் அசைந்து வரும் ஆழித்தேர்!

news

முதல் தோட்டா.....!

அதிகம் பார்க்கும் செய்திகள்