நாடாளுமன்ற மரபுகளை மீறுகிறார் ராகுல் காந்தி...கிரண் ரிஜிஜு கடும் விமர்சனம்

Feb 11, 2026,05:12 PM IST
புதுடெல்லி: முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதிய புத்தகம் தொடர்பான சர்ச்சைகள் இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களின் செயல்பாடுகளை விமர்சித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதிய புத்தகம் ஒன்றில் பாதுகாப்பு துறை சார்ந்த முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்த புத்தகத்தை வெளியிட மத்திய பாதுகாப்புத்துறை அனுமதி வழங்கவில்லை. அந்த புத்தகத்தின் ஒரு பிரதி கூட அச்சிடப்படவோ அல்லது டிஜிட்டல் வடிவமாகவோ வெளியிடப்படவில்லை என அந்த புத்தகத்தை அச்சிட்டு, வெளியிடும் காப்புரிமம் பெற்ற நிறுவனம் கூறுகிறது. ஆனால் அந்த புத்தகத்தை கையில் வைத்துள்ள ராகுல் காந்தி, அதில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் குறித்து மத்திய அரசை கேள்வி கேட்டு வருகிறார். 



ஒரு பிரதி கூட அச்சிடப்படாத ஒரு புத்தகம் எப்படி ராகுல் காந்திக்கு கிடைத்தது என மத்திய பாதுகாப்புத்துறை கேள்வி எழுப்பி வருகிறது. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான ஒரு விஷயத்தை, ராகுல் காந்தி தனது சுய லாபத்திற்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் தவறான முறையில் பயன்படுத்துவதாக அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். தேசப் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ராணுவ மற்றும் அரசாங்க ரீதியிலான ரகசியங்கள் குறித்து பேசிய ரிஜிஜு, ராணுவ தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான உரையாடல்கள், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சருக்கு இடையிலான ரகசியத் தொடர்புகள், இவை அனைத்தும் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டால், நாட்டின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இத்தகைய ரகசியத் தகவல்களை அரசியல் மேடைகளுக்கு இழுப்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு உகந்ததல்ல என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் காந்தி தொடர்ந்து நாடாளுமன்ற மரபுகளை மீறி வருவதாகவும், சபையின் மாண்பைக் காக்க வேண்டிய சபாநாயகரை அவமதிக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் இருப்பதாகவும் அமைச்சர் சாடியுள்ளார். சபாநாயகரை அவமதிப்பது ஜனநாயக முறைப்படி துரதிர்ஷ்டவசமானது என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ராணுவ தளபதியின் புத்தகக் குறிப்புகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த காட்டமான பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

அதிமுக.,வில் முற்றும் மோதல்... கே.சி. வீரமணி மனமாற்றம்.. ஆளுநரை சந்திக்க இபிஎஸ் திட்டம்

news

முதல்வர் விஜய் நெற்றியை கவனிச்சீங்களா? கருப்பு மைக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்

news

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு.. ரூ.96.11 ஆகக் குறைந்தது

news

நாககோட்டி டூ சேஷ்நாக்.. 4 கிலோமிட்டர் சுமந்து சென்ற லீலா.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 6)

news

IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வெற்றியால்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஹேப்பிண்ணே!

news

NEET.. நீட் தேர்வு முறையில் பெரும் மாற்றம் வருகிறது.. அடுத்த ஆண்டு முதல் கம்ப்யூட்டரில் தேர்வு!

news

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: காலையிலேய ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்

news

அறிவுக் கூர்மையும் புத்திசாலித்தனமும் (Intellect and Intelligence)

அதிகம் பார்க்கும் செய்திகள்