-க.யாஸ்மின் சிராஜூதீன்
பசுமையான பூமி இருந்தது..
கலகல என சிரித்து மகிழ்ந்தது
மரங்கள் நிறைந்த காடுகள் இருந்தன
பசுமை எங்கும் நிரம்பி வழிந்தது
சலசல என ஓடும் நீர்நிலைகள் இருந்தன...
அள்ளிப்பருக ஆசை இருந்தது
பறவை இனங்கள் மகிழ்ந்து பறந்தன
விலங்குகள் எல்லாம் காட்டில் வாழ்ந்தன...
குழந்தைகள் கூடி விளையாடி மகிழ்ந்தனர்....
குடும்பங்கள் ஒன்றாய் கூடி வாழ்ந்து மகிழ்ந்தன...
இயற்கையை நாமும் போற்றினோம்
இயற்கை நம்மை காத்தது...

இவையெல்லாம் இப்போ எங்கே சென்றது.....
என்று எண்ணி மலரும் நினைவுகள் ஆனது ....
பூமியோடு நாமும் ஏங்கிநிற்கிறோம்..!!
பசுமையெல்லாம் கட்டிடங்கள் ஆனது
உணவைநாடி எங்கே போவது
நீர்நிலைகள் குப்பை ஆனது
குடிக்க தண்ணீர் குடுவை ஆனது
விலங்குகள் எல்லாம் வீட்டை இழந்தன...
குழந்தைகள் எல்லாம் அலைபேசியில் விளையாடுது...
ஆரோக்கியம் எல்லாம் இழந்து நிற்குது....
குடும்பம் எல்லாம் தனிக்குடும்பம் ஆனது...
இயற்கை சீற்றம் அதிகம் ஆனது
பூமியை நாமும் காக்கனும்
குப்பைகளை பிரித்து போடனும்
பூமியை அழ விடக்கூடாது
சிரிக்கும் பூமியை மீட்டெடுப்போம்
நாம் அனைவரும் ஒன்றாய் சேர்ந்துதான்....
மாசில்லாத உலகம் படைப்போம் வாருங்கள்.....!!!
இன்பம் கிடைக்கும் பாருங்கள்...!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}