-க.யாஸ்மின் சிராஜூதீன்
பசுமையான பூமி இருந்தது..
கலகல என சிரித்து மகிழ்ந்தது
மரங்கள் நிறைந்த காடுகள் இருந்தன
பசுமை எங்கும் நிரம்பி வழிந்தது
சலசல என ஓடும் நீர்நிலைகள் இருந்தன...
அள்ளிப்பருக ஆசை இருந்தது
பறவை இனங்கள் மகிழ்ந்து பறந்தன
விலங்குகள் எல்லாம் காட்டில் வாழ்ந்தன...
குழந்தைகள் கூடி விளையாடி மகிழ்ந்தனர்....
குடும்பங்கள் ஒன்றாய் கூடி வாழ்ந்து மகிழ்ந்தன...
இயற்கையை நாமும் போற்றினோம்
இயற்கை நம்மை காத்தது...

இவையெல்லாம் இப்போ எங்கே சென்றது.....
என்று எண்ணி மலரும் நினைவுகள் ஆனது ....
பூமியோடு நாமும் ஏங்கிநிற்கிறோம்..!!
பசுமையெல்லாம் கட்டிடங்கள் ஆனது
உணவைநாடி எங்கே போவது
நீர்நிலைகள் குப்பை ஆனது
குடிக்க தண்ணீர் குடுவை ஆனது
விலங்குகள் எல்லாம் வீட்டை இழந்தன...
குழந்தைகள் எல்லாம் அலைபேசியில் விளையாடுது...
ஆரோக்கியம் எல்லாம் இழந்து நிற்குது....
குடும்பம் எல்லாம் தனிக்குடும்பம் ஆனது...
இயற்கை சீற்றம் அதிகம் ஆனது
பூமியை நாமும் காக்கனும்
குப்பைகளை பிரித்து போடனும்
பூமியை அழ விடக்கூடாது
சிரிக்கும் பூமியை மீட்டெடுப்போம்
நாம் அனைவரும் ஒன்றாய் சேர்ந்துதான்....
மாசில்லாத உலகம் படைப்போம் வாருங்கள்.....!!!
இன்பம் கிடைக்கும் பாருங்கள்...!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை
TVK Govt.. இது விஜய் மாடல் அரசு.. சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம்!
தீதறு தெளிவு கொள்.. செய்வது துணிந்து செய்.. நிறத்தால் அல்ல நெஞ்சால் வாழ்க!
வானவில் என்னும் மாயவில்
என் கண்ணில் என்ன பார்த்தாய்.. இதுதான் காதலா?
எம்எல்ஏ.,க்களுக்கான பயிற்சி முகாம்... குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
காற்று
தேவர்களின் மாலைக்காலம்.. சிவ வழிபாட்டுக்கு உகந்தது.. ஆனி மாத சிறப்புகள்!
{{comments.comment}}