மாசில்லாத உலகம் படைப்போம்!

Mar 16, 2026,03:51 PM IST

-க.யாஸ்மின் சிராஜூதீன்


பசுமையான பூமி இருந்தது..

கலகல என சிரித்து மகிழ்ந்தது

மரங்கள் நிறைந்த காடுகள் இருந்தன

பசுமை எங்கும் நிரம்பி வழிந்தது


சலசல என ஓடும் நீர்நிலைகள் இருந்தன...

அள்ளிப்பருக ஆசை இருந்தது

பறவை இனங்கள் மகிழ்ந்து பறந்தன

விலங்குகள் எல்லாம் காட்டில் வாழ்ந்தன...


குழந்தைகள் கூடி விளையாடி மகிழ்ந்தனர்....

குடும்பங்கள் ஒன்றாய் கூடி வாழ்ந்து மகிழ்ந்தன...

இயற்கையை நாமும் போற்றினோம்

இயற்கை நம்மை காத்தது...




இவையெல்லாம் இப்போ எங்கே சென்றது.....

என்று எண்ணி மலரும் நினைவுகள் ஆனது ....

பூமியோடு நாமும் ஏங்கிநிற்கிறோம்..!!


பசுமையெல்லாம் கட்டிடங்கள் ஆனது

உணவைநாடி எங்கே போவது

நீர்நிலைகள் குப்பை ஆனது

குடிக்க தண்ணீர் குடுவை ஆனது


விலங்குகள் எல்லாம் வீட்டை இழந்தன...

குழந்தைகள் எல்லாம் அலைபேசியில் விளையாடுது...

ஆரோக்கியம் எல்லாம் இழந்து நிற்குது....

குடும்பம் எல்லாம் தனிக்குடும்பம் ஆனது...


இயற்கை சீற்றம் அதிகம் ஆனது

பூமியை நாமும் காக்கனும்

குப்பைகளை பிரித்து போடனும்

பூமியை அழ விடக்கூடாது


சிரிக்கும் பூமியை மீட்டெடுப்போம்

நாம் அனைவரும் ஒன்றாய் சேர்ந்துதான்....

மாசில்லாத உலகம் படைப்போம் வாருங்கள்.....!!!

இன்பம் கிடைக்கும் பாருங்கள்...!!!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் அனலை கிளப்ப போகும் டாப் 10 பிரச்சனைகள்

news

அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

news

விடியா ஆட்சியில் விலகாத இருள்: பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பற்ற சூழல்: தவெக

news

ரஜினிகாந்திடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

news

ஆறு அடி நிலம் போதும்... ஆனால் பேராசை மட்டும் அடங்கவில்லை!

news

ஜனநாயகன் விவகாரம் முடிவுக்கு வருகிறதா? நாளை தணிக்கை குழு மறுஆய்வு

news

விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? செங்கோட்டையன் சொன்ன காட்டமான பதில்

news

மாசில்லாத உலகம் படைப்போம்!

news

தமிழகத்தில் மார்ச் 18 மற்றும் 19ம் தேதிகளில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்