டெல்லி: டெல்லியில், லிவ் இன் பார்ட்னரின் 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 29 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் மீது பலாத்காரம் உள்ளிட்ட2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டமும் அவர் மீது பாய்ந்துள்ளது.
அந்த நபரின் பெயர் அங்கித் யாதவ். பஸ் டிரைவர். 29 வயதான இவர் காஸியாபாத்தைச் சேர்ந்தவர். ஒரு பெண்ணுடன் லிவ் இன் உறவில் இருந்து வந்தார். அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர். எட்டு வருடத்திற்கு முன்பே இருவரும் பிரிந்து விட்டனர். அப்பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
தனது குழந்தைகளுடன், அங்கித் யாதவுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே வசித்து வந்தார் அப்பெண். இந்த நிலையில்தான் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், அப்பெண்ணின் 14 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் அங்கித் யாதவ்.
ஜூலை 23ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது சிறுமியின் தாயார் மருத்துவமனைக்குப் போயிருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு பலாத்காரம் செய்துள்ளார் அங்கித் யாதவ். இதை வெளியில் சொல்லக் கூடாது என்று கூறி மிரட்டி மேலும் சில முறையும் கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார்.
ஆனால் அந்த சிறுமி பின்னர் தனது தாயாரிடம் நடந்ததைச் சொல்ல அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் உடனடியாக செயல்பட்டு அங்கித் யாதவைக் கைது செய்தனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}