டெல்லி: டெல்லியில், லிவ் இன் பார்ட்னரின் 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 29 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் மீது பலாத்காரம் உள்ளிட்ட2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டமும் அவர் மீது பாய்ந்துள்ளது.
அந்த நபரின் பெயர் அங்கித் யாதவ். பஸ் டிரைவர். 29 வயதான இவர் காஸியாபாத்தைச் சேர்ந்தவர். ஒரு பெண்ணுடன் லிவ் இன் உறவில் இருந்து வந்தார். அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர். எட்டு வருடத்திற்கு முன்பே இருவரும் பிரிந்து விட்டனர். அப்பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
தனது குழந்தைகளுடன், அங்கித் யாதவுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே வசித்து வந்தார் அப்பெண். இந்த நிலையில்தான் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், அப்பெண்ணின் 14 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் அங்கித் யாதவ்.
ஜூலை 23ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது சிறுமியின் தாயார் மருத்துவமனைக்குப் போயிருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு பலாத்காரம் செய்துள்ளார் அங்கித் யாதவ். இதை வெளியில் சொல்லக் கூடாது என்று கூறி மிரட்டி மேலும் சில முறையும் கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார்.
ஆனால் அந்த சிறுமி பின்னர் தனது தாயாரிடம் நடந்ததைச் சொல்ல அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் உடனடியாக செயல்பட்டு அங்கித் யாதவைக் கைது செய்தனர்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}