டெல்லி: டெல்லியில், லிவ் இன் பார்ட்னரின் 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 29 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் மீது பலாத்காரம் உள்ளிட்ட2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டமும் அவர் மீது பாய்ந்துள்ளது.
அந்த நபரின் பெயர் அங்கித் யாதவ். பஸ் டிரைவர். 29 வயதான இவர் காஸியாபாத்தைச் சேர்ந்தவர். ஒரு பெண்ணுடன் லிவ் இன் உறவில் இருந்து வந்தார். அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர். எட்டு வருடத்திற்கு முன்பே இருவரும் பிரிந்து விட்டனர். அப்பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

தனது குழந்தைகளுடன், அங்கித் யாதவுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே வசித்து வந்தார் அப்பெண். இந்த நிலையில்தான் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், அப்பெண்ணின் 14 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் அங்கித் யாதவ்.
ஜூலை 23ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது சிறுமியின் தாயார் மருத்துவமனைக்குப் போயிருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு பலாத்காரம் செய்துள்ளார் அங்கித் யாதவ். இதை வெளியில் சொல்லக் கூடாது என்று கூறி மிரட்டி மேலும் சில முறையும் கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார்.
ஆனால் அந்த சிறுமி பின்னர் தனது தாயாரிடம் நடந்ததைச் சொல்ல அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் உடனடியாக செயல்பட்டு அங்கித் யாதவைக் கைது செய்தனர்.
தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு
KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?
தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?
டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்
அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி
லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?
Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!
{{comments.comment}}