ஆவடி அருகே தடம் புரண்ட மின்சார ரயில்.. டிரைவர் தூங்கியதால் விபரீதம்!

Oct 24, 2023,02:09 PM IST

சென்னை:  சென்னையை அடுத்துள்ள ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. டிரைவர் தூங்கி விட்டதால் ரயில் நிற்காமல் போய் தடம் புரண்டதாக தெரிய வந்துள்ளது.


சென்னை புறநகர் ரயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை சென்ட்ரலில் இருந்தும், கடற்கரையில் இருந்தும் நாள்தோறும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு   மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தடம் புரண்ட பகுதியில் ரயில்கள் இயக்க முடியாததால் வந்தேபாரத் உள்பட பல்வேறு ரயில்களும் தாமதமாகியுள்ளன. 




திருவள்ளூர் மாவட்டம்அண்ணூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 4  பெட்டிகள் தடம் புரண்டதினால் சில மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த வந்தே பாரத், சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது.


இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் ரயில்கள் அனைத்தும் தாமதமாகவே பயணித்தது. விபத்தில் உயிர்  சேதம் எதுவும் இல்லை. மின்சார ரயில் தடம் புரண்டது தொடர்பாக, ரயில்வே துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முதற்கட்ட விசாரணையில் ரயில் ஓட்டுனரின் அஜாக்கிரதை தான் விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. அவர் கண் அசந்து சற்று தூங்கி விட்டதால் விபத்து நேரிட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் ரயில் தடம் புரண்ட பகுதியில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


ஆயுத பூஜையை முன்னிட்டு விடுமுறை என்பதால் மக்கள் அங்கும் இங்குமாக பயணித்து வரும் வேலையில்  இந்த சம்பவம் நடந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். ரயில் தடம் புரண்டுள்ளதால் அப்பகுதியில் பயணிக்கும் அனைத்து ரயில்களும் தாமதமாக செயல்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சமீபத்திய செய்திகள்

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

அதிகம் பார்க்கும் செய்திகள்