சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக பேச்சாளர்கள் எப்படிப் பேச வேண்டும், எந்த விஷயத்தை முன்னிலைப்படுத்த வேண்டும், வேட்பாளர்களுக்கு எப்படி உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை விளக்குவதற்காக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை கட்சி மேலிடம் ஏற்பாடு செய்துள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளில் கட்சிகள் இறங்கியுள்ளன. பல முக்கியக் கட்சிகள் கூட்டணிகளை இறுதிப்படுத்தும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பல கட்சிகளில் கட்சி அமைப்புகளை வலுப்படுத்தி, ஆயத்த நிலைக்குக் கொண்டு சென்று கொண்டுள்ளன. தொகுதிப் பங்கீடுகளும் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் பல்வேறு வேலைகளை செய்து வருகிறது. கூட்டணியை இறுதி செய்ய ஒரு பக்கம் பேச்சுக்கள் நடந்து கொண்டுள்ளன. மறுபக்கம் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது அதிமுக பேச்சாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளனர்.
மார்ச் 1ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் சிராஜ் ஹோட்டலில் காலை 10- மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. இதில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், சிறந்த மேடைப் பேச்சாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த கூட்டத்தில் கடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டா திட்டங்களையும், திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் இன்னல்களையும், திமுக அரசு இழைத்து வரும் பல்வேறு துரோகங்களையும் பட்டி தொட்டியெங்கும் வாழும் மக்களிடம் தேர்தல் பரப்புரை மூலம் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை வழங்கப்படவுள்ளதாம்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு பரப்புரைகளும் கூட உடனடியாக தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}