பூன்ச்: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாடுபட்ட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். ராமர், இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல.. உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதி ராமர் சிலையை நிறுவும் விழா நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூன்ச் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா திறப்பு விழாவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் சகோதரத்துவம் மறைந்து வருகிறது. அதை மீண்டும் உயிர்ப்பித்து வலுப்படுத்த வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. இந்தக் கோவில் வர வேண்டும் என்று பாடுபட்ட அனைவரையும் வாழ்த்துகிறேன்.
ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர் அவர். மதச்சார்பற்று அனைவருக்கும் அவர் கடவுள். அப்படித்தான் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. சகோதரத்துவம், அன்பு, ஒற்றுமை, ஒருவருக்கு ஒருவர் உதவுதல் ஆகியவற்றை வலியுறுத்தியவர் ராமர். மதம் இனப் பாகுபாடில்லாமல் அனைவரையும் கை தூக்கி விட வேண்டும் என்ற செய்தியை விட்டுச் சென்றவர் ராமர் என்று கூறினார் பரூக் அப்துல்லா.
ராமல் சிலை பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவுள்ளனர். நாடு முழுவதிலுமிருந்து 4000 துறவிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக-விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி வலுவாக உள்ளது.. திருமாவளவன் திட்டவட்டம்
திருச்சி அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்த ஆர்டிஓ தேவசேனா.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
திமுகவின் கண்ணுக்குட்டி மட்டுமல்ல.. கண்ணுக்குட்டியின் எஜமானர்களும் சிக்குவர்: எடப்பாடி பழனிச்சாமி
அகமதாபாத் விமான விபத்து... ஏர் இந்தியா கருப்புப் பெட்டி கடும் சேதம்!
கமல் படத்தைத் தடுக்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?.. கன்னட அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!
கொமேனியைத் தெரியுமா.. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள நெருக்கமான லிங்க்!
குடமுழுக்கு முழுமையாக தமிழில் நடத்தப்பட வேண்டும்... தமிழிலும் குடமுழுக்கு என்பது அவமானம்: சீமான்!
நம் சமையலறையில்.. ஏலக்காய்க்கு முக்கியத்துவம் ஏன் தெரியுமா.. இதாங்க காரணம்!
மீண்டும் தொடர் உயர்வில் தங்கம்... இன்றைக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
{{comments.comment}}