சென்னை: திரையுலகில் ரசிகர்களின் ஆதரவு எனக்கு எப்போது இருக்கும் என மலையாளத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இவர் தமிழுக்கும் வருவாரா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பல திறமைகளைக் கொண்டவர்கள் சினிமாவின் மீதுள்ள காதலால் தங்களின் அழகையும், நடிப்பின் திறமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி திரை உலகில் பயணிப்பவர்கள் பலர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதித்தும் வருகின்றனர். சினிமாவில் சாதிக்கும் எத்தனையோ நடிகைகள் தங்களின் நடிப்பின் திறமையால் நம்மை கவரவும் தவறுவதில்லை.
அந்த வகையில் பல திறமைகளை வெளிப்படுத்தும் நோக்குடன் சினிமாவில் அசத்திக் கொண்டிருக்கிறார் ஜிஜ்னா ராதாகிருஷ்ணன். இவர் தற்போது மலையாளத்தில் அசத்தி வரும் இளம் நடிகை ஆவார். பல்வேறு திறமைகள் உள்ளடக்கியவர். இவர் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். ஆங்கிலம், இந்தி, மராத்தி, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடிய திறமை மிக்கவர்.
மே ஹூன் மூசா என்ற மலையாள படத்தில் சுரேஷ்கோபியின் மகளாக நடித்தவர். அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. மறைந்த இயக்குனர் சித்திக்கின் வழிகாட்டுதலின்படி ஜிஜ்னா நடித்த இன்னொரு படம் "போரட்டு நாடகம்". இப்படம் மே மாதம் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது அவர் சலாம் புகாரியின் உடம்பஞ்சோலோ விஷன் என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது.
இது மட்டுமல்லாமல் இவர் சோசியல் மீடியாவில் ஜோவியலான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் மனதை வசீகரித்து வருபவரும் கூட. பல்வேறு திறமைகளை கொண்ட இவர் தமிழிலும் ஜொலிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். காரணம், நல்ல திறமையுள்ள கலைஞர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கத் தயாராக இருப்பது தமிழ் சினிமா.
"எனக்கு பிடித்த நடிகர் அமீர் கான். எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆன நடிகை சுஷ்மிதா சென் மற்றும் ஓப்ரா வின்ஃப்ரே. பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். இதுதான் எனது விருப்பம். இந்த விருப்பத்தை நிறைவேற்ற ரசிகர்களின் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கும்" என்று நம்பிக்கையாக கூறியுள்ளார் நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன்.
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
{{comments.comment}}