சென்னை: திரையுலகில் ரசிகர்களின் ஆதரவு எனக்கு எப்போது இருக்கும் என மலையாளத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இவர் தமிழுக்கும் வருவாரா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பல திறமைகளைக் கொண்டவர்கள் சினிமாவின் மீதுள்ள காதலால் தங்களின் அழகையும், நடிப்பின் திறமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி திரை உலகில் பயணிப்பவர்கள் பலர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதித்தும் வருகின்றனர். சினிமாவில் சாதிக்கும் எத்தனையோ நடிகைகள் தங்களின் நடிப்பின் திறமையால் நம்மை கவரவும் தவறுவதில்லை.

அந்த வகையில் பல திறமைகளை வெளிப்படுத்தும் நோக்குடன் சினிமாவில் அசத்திக் கொண்டிருக்கிறார் ஜிஜ்னா ராதாகிருஷ்ணன். இவர் தற்போது மலையாளத்தில் அசத்தி வரும் இளம் நடிகை ஆவார். பல்வேறு திறமைகள் உள்ளடக்கியவர். இவர் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். ஆங்கிலம், இந்தி, மராத்தி, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடிய திறமை மிக்கவர்.
மே ஹூன் மூசா என்ற மலையாள படத்தில் சுரேஷ்கோபியின் மகளாக நடித்தவர். அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. மறைந்த இயக்குனர் சித்திக்கின் வழிகாட்டுதலின்படி ஜிஜ்னா நடித்த இன்னொரு படம் "போரட்டு நாடகம்". இப்படம் மே மாதம் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது அவர் சலாம் புகாரியின் உடம்பஞ்சோலோ விஷன் என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது.
இது மட்டுமல்லாமல் இவர் சோசியல் மீடியாவில் ஜோவியலான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் மனதை வசீகரித்து வருபவரும் கூட. பல்வேறு திறமைகளை கொண்ட இவர் தமிழிலும் ஜொலிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். காரணம், நல்ல திறமையுள்ள கலைஞர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கத் தயாராக இருப்பது தமிழ் சினிமா.

"எனக்கு பிடித்த நடிகர் அமீர் கான். எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆன நடிகை சுஷ்மிதா சென் மற்றும் ஓப்ரா வின்ஃப்ரே. பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். இதுதான் எனது விருப்பம். இந்த விருப்பத்தை நிறைவேற்ற ரசிகர்களின் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கும்" என்று நம்பிக்கையாக கூறியுள்ளார் நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}