சென்னை: திரையுலகில் ரசிகர்களின் ஆதரவு எனக்கு எப்போது இருக்கும் என மலையாளத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இவர் தமிழுக்கும் வருவாரா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பல திறமைகளைக் கொண்டவர்கள் சினிமாவின் மீதுள்ள காதலால் தங்களின் அழகையும், நடிப்பின் திறமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி திரை உலகில் பயணிப்பவர்கள் பலர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதித்தும் வருகின்றனர். சினிமாவில் சாதிக்கும் எத்தனையோ நடிகைகள் தங்களின் நடிப்பின் திறமையால் நம்மை கவரவும் தவறுவதில்லை.

அந்த வகையில் பல திறமைகளை வெளிப்படுத்தும் நோக்குடன் சினிமாவில் அசத்திக் கொண்டிருக்கிறார் ஜிஜ்னா ராதாகிருஷ்ணன். இவர் தற்போது மலையாளத்தில் அசத்தி வரும் இளம் நடிகை ஆவார். பல்வேறு திறமைகள் உள்ளடக்கியவர். இவர் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். ஆங்கிலம், இந்தி, மராத்தி, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடிய திறமை மிக்கவர்.
மே ஹூன் மூசா என்ற மலையாள படத்தில் சுரேஷ்கோபியின் மகளாக நடித்தவர். அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. மறைந்த இயக்குனர் சித்திக்கின் வழிகாட்டுதலின்படி ஜிஜ்னா நடித்த இன்னொரு படம் "போரட்டு நாடகம்". இப்படம் மே மாதம் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது அவர் சலாம் புகாரியின் உடம்பஞ்சோலோ விஷன் என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது.
இது மட்டுமல்லாமல் இவர் சோசியல் மீடியாவில் ஜோவியலான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் மனதை வசீகரித்து வருபவரும் கூட. பல்வேறு திறமைகளை கொண்ட இவர் தமிழிலும் ஜொலிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். காரணம், நல்ல திறமையுள்ள கலைஞர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கத் தயாராக இருப்பது தமிழ் சினிமா.

"எனக்கு பிடித்த நடிகர் அமீர் கான். எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆன நடிகை சுஷ்மிதா சென் மற்றும் ஓப்ரா வின்ஃப்ரே. பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். இதுதான் எனது விருப்பம். இந்த விருப்பத்தை நிறைவேற்ற ரசிகர்களின் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கும்" என்று நம்பிக்கையாக கூறியுள்ளார் நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}