சென்னை: திரையுலகில் ரசிகர்களின் ஆதரவு எனக்கு எப்போது இருக்கும் என மலையாளத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இவர் தமிழுக்கும் வருவாரா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பல திறமைகளைக் கொண்டவர்கள் சினிமாவின் மீதுள்ள காதலால் தங்களின் அழகையும், நடிப்பின் திறமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி திரை உலகில் பயணிப்பவர்கள் பலர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதித்தும் வருகின்றனர். சினிமாவில் சாதிக்கும் எத்தனையோ நடிகைகள் தங்களின் நடிப்பின் திறமையால் நம்மை கவரவும் தவறுவதில்லை.

அந்த வகையில் பல திறமைகளை வெளிப்படுத்தும் நோக்குடன் சினிமாவில் அசத்திக் கொண்டிருக்கிறார் ஜிஜ்னா ராதாகிருஷ்ணன். இவர் தற்போது மலையாளத்தில் அசத்தி வரும் இளம் நடிகை ஆவார். பல்வேறு திறமைகள் உள்ளடக்கியவர். இவர் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். ஆங்கிலம், இந்தி, மராத்தி, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடிய திறமை மிக்கவர்.
மே ஹூன் மூசா என்ற மலையாள படத்தில் சுரேஷ்கோபியின் மகளாக நடித்தவர். அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. மறைந்த இயக்குனர் சித்திக்கின் வழிகாட்டுதலின்படி ஜிஜ்னா நடித்த இன்னொரு படம் "போரட்டு நாடகம்". இப்படம் மே மாதம் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது அவர் சலாம் புகாரியின் உடம்பஞ்சோலோ விஷன் என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது.
இது மட்டுமல்லாமல் இவர் சோசியல் மீடியாவில் ஜோவியலான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் மனதை வசீகரித்து வருபவரும் கூட. பல்வேறு திறமைகளை கொண்ட இவர் தமிழிலும் ஜொலிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். காரணம், நல்ல திறமையுள்ள கலைஞர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கத் தயாராக இருப்பது தமிழ் சினிமா.

"எனக்கு பிடித்த நடிகர் அமீர் கான். எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆன நடிகை சுஷ்மிதா சென் மற்றும் ஓப்ரா வின்ஃப்ரே. பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். இதுதான் எனது விருப்பம். இந்த விருப்பத்தை நிறைவேற்ற ரசிகர்களின் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கும்" என்று நம்பிக்கையாக கூறியுள்ளார் நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன்.
அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!
தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி
தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?
தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி
பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!
சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
{{comments.comment}}