ஆஹா.. மறுபடியும் பஞ்சாயத்தைக் கூட்டும் மன்சூர் அலிகான்.. "சரக்கு" வசனத்தைக் கேட்டீங்களா?

Dec 01, 2023,06:05 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை:  மன்சூர் அலிகானின் சொந்தப் படமான "சரக்கு" திரைப்படத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் நாஞ்சில் சம்பத் "அவ்வையும் அதியமானும் சேர்ந்து குடிக்கலையா?" என்னும் வசனம் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இயக்குனர் ஜெ ஜெயக்குமார் இயக்கத்தில் சரக்கு திரைப்படம்  டிசம்பர் மாதம் வெளிவர உள்ளது. இப்படத்தில் மன்சூர் அலிகான் நாயகனாக நடித்துள்ளார். இவர்தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட. 90களில் பயங்கரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.


தற்போது டூ கே கிட்ஸ்களுக்கு பிடித்தது போல் காமெடி வில்லனாகவும் வலம் வருகிறார். வில்லன், காமெடியன், ஹீரோ,  அரசியல்வாதி என திரை உலகில் முத்திரை பதித்து தனக்கென தனி நட்சத்திர பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். அவ்வப்போது ஏதாவது சர்ச்சையைக் கிளப்பவும் இவர் தவறுவதில்லை.




சரக்கு படத்தில் வலினா பிரின்ஸ் நாயகியாக  நடித்துள்ளார். அமைச்சர் நாஞ்சில் சம்பத் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவி மரியா, லொள்ளு சபா முஷா, மதுமிதா, பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் என பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.


தமிழ்நாட்டை பாடாய்ப்படுத்தும் மதுக் கொடுமையை மையமாக வைத்துத்தான் இந்தப் படத்தின் கதையை, நகைச்சுவை உணர்வுடன் உருவாக்கியுள்ளனராம். சமீபத்தில் தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.  அப்போது சரக்கு திரைப்படம் தமிழ்நாட்டையே திரும்பி பார்க்கக் கூடிய படமாக இருக்கும் என கூறியிருந்தனர்.


சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா குறித்து சர்ச்சை பேசியதாக , திரிஷா மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டு நாடே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதற்கு மன்சூர் அலிகான் நான்  த்ரிஷா குறித்து பேசவில்லைல எனவும், கட் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்கள் எனவும் கூறி வந்தார். இந்த செய்தி கடந்த ஒரு வாரமாக  பேசுபொருளாக இருந்து வந்து, மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் மன்சூர் அலிகான் நடிக்கும் சரக்கு திரைப்படத்தில் தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சை  கிளம்பியுள்ளது.


நீண்ட ஆயுளை பெறுவதற்காக அரசனாகிய நான் உண்பதை விட எனது நண்பர் அவ்வையார் உண்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லது என அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனியை பரிசாக அளித்தார்.இந்த செய்தியை வரலாற்றில் நாம் படித்துள்ளோம்..!


ஆனால், சரக்கு திரைப்படத்தில் "அமைச்சர்" நாஞ்சில் சம்பத் ஒரு காட்சியில் அதியமான் ஔவைக்கு சரக்கு ஊற்றி கொடுத்ததாகவும், சங்க காலத்தைத் தந்த தங்க காலத்தில் அவ்வையையும், அதியமானும் சேர்ந்து குடிக்கலையா என்றும் வசனங்களை பேசியுள்ளாராம். இதனால் பிரிவ்யூ காட்சி பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


டிசம்பர் மாசம் வெளியாகும் நிலையில் உள்ள சரக்கு திரைப்படம் வெளிவந்து என்னெல்லாம் சர்ச்சையை கிளப்புமோ என பலரும் பீதியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்