ஆஹா.. மறுபடியும் பஞ்சாயத்தைக் கூட்டும் மன்சூர் அலிகான்.. "சரக்கு" வசனத்தைக் கேட்டீங்களா?

Dec 01, 2023,06:05 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை:  மன்சூர் அலிகானின் சொந்தப் படமான "சரக்கு" திரைப்படத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் நாஞ்சில் சம்பத் "அவ்வையும் அதியமானும் சேர்ந்து குடிக்கலையா?" என்னும் வசனம் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இயக்குனர் ஜெ ஜெயக்குமார் இயக்கத்தில் சரக்கு திரைப்படம்  டிசம்பர் மாதம் வெளிவர உள்ளது. இப்படத்தில் மன்சூர் அலிகான் நாயகனாக நடித்துள்ளார். இவர்தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட. 90களில் பயங்கரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.


தற்போது டூ கே கிட்ஸ்களுக்கு பிடித்தது போல் காமெடி வில்லனாகவும் வலம் வருகிறார். வில்லன், காமெடியன், ஹீரோ,  அரசியல்வாதி என திரை உலகில் முத்திரை பதித்து தனக்கென தனி நட்சத்திர பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். அவ்வப்போது ஏதாவது சர்ச்சையைக் கிளப்பவும் இவர் தவறுவதில்லை.




சரக்கு படத்தில் வலினா பிரின்ஸ் நாயகியாக  நடித்துள்ளார். அமைச்சர் நாஞ்சில் சம்பத் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவி மரியா, லொள்ளு சபா முஷா, மதுமிதா, பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் என பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.


தமிழ்நாட்டை பாடாய்ப்படுத்தும் மதுக் கொடுமையை மையமாக வைத்துத்தான் இந்தப் படத்தின் கதையை, நகைச்சுவை உணர்வுடன் உருவாக்கியுள்ளனராம். சமீபத்தில் தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.  அப்போது சரக்கு திரைப்படம் தமிழ்நாட்டையே திரும்பி பார்க்கக் கூடிய படமாக இருக்கும் என கூறியிருந்தனர்.


சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா குறித்து சர்ச்சை பேசியதாக , திரிஷா மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டு நாடே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதற்கு மன்சூர் அலிகான் நான்  த்ரிஷா குறித்து பேசவில்லைல எனவும், கட் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்கள் எனவும் கூறி வந்தார். இந்த செய்தி கடந்த ஒரு வாரமாக  பேசுபொருளாக இருந்து வந்து, மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் மன்சூர் அலிகான் நடிக்கும் சரக்கு திரைப்படத்தில் தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சை  கிளம்பியுள்ளது.


நீண்ட ஆயுளை பெறுவதற்காக அரசனாகிய நான் உண்பதை விட எனது நண்பர் அவ்வையார் உண்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லது என அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனியை பரிசாக அளித்தார்.இந்த செய்தியை வரலாற்றில் நாம் படித்துள்ளோம்..!


ஆனால், சரக்கு திரைப்படத்தில் "அமைச்சர்" நாஞ்சில் சம்பத் ஒரு காட்சியில் அதியமான் ஔவைக்கு சரக்கு ஊற்றி கொடுத்ததாகவும், சங்க காலத்தைத் தந்த தங்க காலத்தில் அவ்வையையும், அதியமானும் சேர்ந்து குடிக்கலையா என்றும் வசனங்களை பேசியுள்ளாராம். இதனால் பிரிவ்யூ காட்சி பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


டிசம்பர் மாசம் வெளியாகும் நிலையில் உள்ள சரக்கு திரைப்படம் வெளிவந்து என்னெல்லாம் சர்ச்சையை கிளப்புமோ என பலரும் பீதியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்