- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 7 :
அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்
திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பொருள் :
பழங்களின் சுவைகள், அமுதத்தின் சுவை ஆகியவற்றை விட மேலான எவரும் அறிந்து கொள்ள முடியாத அரிய சுவையாக விளங்குவது உன்னுடைய திருநாமத்தை சொல்லும் சுவை. அதன் சுவை என்ன, எப்படி இருக்கும் என தேவர்களும் கூட அறிந்திருக்க மாட்டார்கள். இது தான் உன்னுடைய உருவம். நீ இப்படி தான் இருப்பாய், இவரை போல் இருப்பாய், அவரை போல் இருப்பாய் என எவராலும் கண்டு சொல்ல முடியாது. உன்னுடைய குணங்களை அறிந்து கொள்வது மிகவும் சிரமமானதாகும். உன்னை எளிதாக அடைந்து விடலாம் என சொல்கிறார்களே தவிர தேவர்களாலும் கூட அதை செய்ய முடியாது. எவருக்கும் உன்னுடைய நிஜ வடிவத்தை காட்டி, இது தான் என சொல்ல முடியாத நீ, எங்களை ஆட்கொண்டு அருள வேண்டும் என்று தான் கேட்க முடியும். அதை மட்டும் செய் என்றே உன்னிடம் கேட்கிறோம். தேன் சிந்தும் மலர்களை உடைய சோலைகளால் சூழப்பட்ட உத்திரகோசமங்கையில் எழுந்தருளி இருக்கும் சிவனே! திருப்பெருந்துறையில் வசிக்கும் தலைவனே! அதற்காக துயில் எழுந்தருள வேண்டும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}