சென்னை: சென்னை கடற்கரை -வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயிலுடன் இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் எப்போது நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தலைநகர் சென்னையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்தபடியே உள்ளது. சென்னையில் தற்போது தமிழ்நாட்டு மக்களை விட பிற மாநில மக்கள்தான் அதிகம் உள்ளனர் என்று கருதும் அளவுக்கு மக்கள் தொகை பெருகி விட்டது. காரணம் ஐடி நிறுவனங்களின் பெருக்கம். வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து விட்டதால் போக்குவரத்து நெரிசலும் கண்ணைக் கட்டுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை ரயில்கள்தான் மக்களுக்கு மிகப் பெரிய நிவாரணமாக இருந்து வருகிறது. புறநகர் ரயில் சேவை, பறக்கும் ரயில்கள், மெட்ரோ ஆகியவை மக்களின் போக்குவரத்து தேவைகளை பெருமளவில் நிறைவேற்றுகின்றன. இந்த நிலையில் தலைநகரில் பெருகி வரும் போக்குவரத்து, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்டவை காரணமாக பல்வேறு தொலைநோக்கு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது.
சென்னை நகரில் பல்வேறு இடங்களில் மெட்ரோ லைட் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல இன்னொரு மெகா திட்டமாக, மெட்ரோவையும், பறக்கும் ரயிலையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை -வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. அதேபோல வேளச்சேரியையும், பரங்கிமலை ரயில்நிலையத்தையும் இணைக்கும் திட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை கடற்கரை -வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் 18 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் போதிய அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. இதை சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் ரயில் நிலையங்களை சுற்றி 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். பறக்கும் ரயில் நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மறு சீரமைப்பு செய்து மேம்படுத்தப்படும்.
பறக்கும் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற சென்னை பெருநகர ஒருங்கிணைத்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. அதன் பின்னர் டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்தி தரத்துடன் பறக்கும் ரயில்களை இயக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}