சென்னை: புதிய கட்சி கூட்டணியில் வர வாய்ப்புள்ளது. காங்கிரஸ் இயக்கத்துடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கிறோம். எந்த மோதல் போக்கும் இல்லை. எந்த கருத்துக் கணிப்புகள் வந்தாலும் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளன என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், ஆளும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் உருவாகியுள்ள கருத்து மோதல்கள் அரசியல் வட்டாரத்தை சூடேற்றியுள்ளது. வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தரப்பில் முன்வைத்திருப்பதும், அதற்கான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை தாமதமாகி வருவதுமாக கருத்துக்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், நெல்லையில் இன்று திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது. அது யார் என்பதை முதல்வர் தெரிவிப்பார். காங்கிரஸ் இயக்கத்துடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கிறோம். எந்த மோதல் போக்கும் இல்லை. எந்த கருத்துக் கணிப்புகள் வந்தாலும் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளன. திமுக மீது நம்பிக்கை வைத்து மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர்.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}