நைனிடால்: ஒட்டு மொத்த தேசமும் நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் ஒரு முக்கியமான நபரை எதிர்பார்த்திருந்தது. ஆனால் அவர் அங்கு வரவில்லை.. மாறாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனது பூர்வீக கிராமத்திற்கு மனைவியுடன் விசிட் அடித்திருந்தார்.. அவர்தான் தல தோனி.
கூல் கேப்டனாக வலம் வந்தவர் தோனி. சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு அவருக்குத்தான் நாடு முழுவதும் அதி தீவிர ரசிகர்கள் உள்ளனர். இந்த கபில் தேவுக்குப் பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்த ஒரே கேப்டன் தோனிதான். 20-20 உலகக் கோப்பை மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை என்று இரண்டு கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்த ஒரே கேப்டனும் தோனி மட்டுமே.
ஐசிசியின் அனைத்து சாம்பியன் பட்டங்களையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையும் தோனிக்கு மட்டுமே உண்டு. நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் இந்தியா நியூசிலாந்து இடையிலான அரை இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா அட்டகாசமான வெற்றியைப் பெற்று அசத்தியது. இந்தப் போட்டியைக் காண தோனி வருவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் வரவில்லை. மாறாக அவர் தனது மனைவியுடன் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தனது மனைவியுடன் போயிருந்தார். அங்குள்ள பூர்வீக கிராமத்திற்கு விசிட் அடித்திருந்தார் தோனி.
இதுதொடர்பான அழகான புகைப்படத்தை தோனியின் மனைவி சாக்ஷி சிங் வெளியிட்டுள்ளார். லவாலி என்ற அந்தக் கிராமம், அல்மோரா மாவட்டத்தில் உள்ளது. இதுதான் தோனியின் மூதாதையர் வாழ்ந்த கிராமமாம். இங்குதான் தோனியின் பல்வேறு உறவினர்களும் வசிக்கிறார்களாம். இதுதொடர்பான குட்டி வீடியோ ஒன்றையும் சாக்ஷி சிங் போட்டுள்ளார்.
தோனி சமூக வலைதளங்களில் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார். போட்டோ போடுவதில்லை. எந்தப் பதிவும் போடுவதும் இல்லை. ஆனால் சாக்ஷி சிங் அதில் கில்லாடி. படு ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தோனி குறித்த போட்டோ, வீடியோவைப் போடுவதுதான் அவரது முக்கிய வேலையே. இதனால் ரசிகர்கள் சாக்ஷி சிங்குக்கு நன்றி கூறுவதும் வழக்கம். அந்த வகையில் இந்த போட்டோவும், வீடியோவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
2020ம் ஆண்டு அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்று விட்டார் தோனி. ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவர் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்
விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை... கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!
விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா?: சீமான் கண்டனம்
முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.. குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின்
பட புரோமோஷனுக்காக புடவையில் வந்த கஜோல்... விலையை கேட்டால் அப்டியே மயங்கிருவீங்க!
கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!
{{comments.comment}}