- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
காசு கொடுக்கத் தேவையில்லை...
கடையைத் தேடி அலையவில்லை...
ரோஜாப்பூ பூக்காத நிலத்திலும்
மல்லிகைப்பூ மலராத பொழுதிலும்
வெள்ளை வெள்ளையாய்..
கொள்ளை கொள்ளையாய்...

மரமெல்லாம் பூத்துக்குலுங்கும் ...
மஞ்சணத்திப் பூ...
மஞ்சணத்திப் பூவே..
மழலையின் மனம் கவர்ந்த பூவே...
மஞ்சணத்திப் பூவே..
நறுமணம் கமழும் பூவே!
நடு சாமத்தில் மலரும்
நட்சத்திர வடிவ நறுமுகைப்பூவே
ஆசை ஆசையாய்
என் பாவாடையில் அள்ளி வந்த அலரே
மஞ்சணத்திப் பூப்பூத்தால்
மழை வரும் என்ற என் பாட்டிக்கு
வானிலை அறிக்கை தரும் வானொலிப்பூவே...
விதவிதமாய் பூக்கள் இன்றிருந்தாலும்...
மலரும் நினைவுகளைக் கண்முன்னே நிறுத்தும்
வெண்பட்டுப் பூவே...
நீயே
என் மனம் கவர்ந்த பூ!
அடுக்கு மல்லி ஜாதிமல்லி குண்டுமல்லி அந்தி மல்லி..
எத்தனை மல்லி வந்தாலும்...
நீ தானே என் பவளமல்லி!
எங்க ஊரு அமுதமல்லி!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}