நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்

Jan 29, 2026,05:25 PM IST

சென்னை: நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது. நெல்லை தொகுதி மக்கள் என்னை ஒரு பிள்ளையாக பார்க்கிறார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பொறுத்திருந்து பாருங்கள். 2001 முதல் 2021 வரை நெல்லை தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். நெல்லை தொகுதி மக்கள் என்னை ஒரு பிள்ளையாக பார்க்கிறார்கள். நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது. 




ஓபிஎஸ் தனது கூட்டத்தை நடத்தி முடிக்கட்டும். அதன்பின்னர் தான் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரியும். நல்வர்கள் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள். இது வரைக்கும் ஓபிஎஸ்சிடம் கூட்டணி குறித்து பேசவில்லை. தேவைப்பாட்டல் கட்டாயம் பேசுவேன். தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கஞ்சா பழக்கம் தான். இந்த கஞ்சா பழக்கத்திற்கு அதிகளவில் வட மாநிலத்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.16 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளது. பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு நாங்கள் 5 பைசா கூட செலவிடவில்லை. மத்திய அரசு திட்ட மேம்பாட்டுகளுக்காக 14 லட்சம் கோடிகள் கொடுத்துள்ளார். ஆனால் தமிழக முதல்வரோ அவர் எதுவுமே தரவில்லை என்று சொல்லிக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்