"சும்மா கதறாதீங்க.. மன்மோகன் சிங்கே சொல்லிருக்காரே".. திமுகவுக்கு பாஜக பதிலடி!

Apr 08, 2023,09:22 AM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் கூடன்குளம், ஸ்டெர்லைட் போராட்டம் குறித்துக் கூறியதற்காக திமுக கூட்டணிக் கட்சிகள் குய்யோ முறையோ என்று கதறிக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை அவர்கள் வசதியாக மறந்து விட்டனர் என்று கூறியுள்ளார் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.



இதுதொடர்பாக நாராணன் திருப்பதி போட்டுள்ள ட்வீட்:

தமிழக ஆளுநர் பேசுகையில் கூடன்குளம் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட நிதி மக்களை தூண்ட பயன்பட்டது என்று  பேசியதற்காக தி மு க வினரும், காங்கிரஸ் கட்சியினரும் 'குய்யோ முறையோ' என்று கதறி கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் ஆளுநர்  ஸ்டெர்லைட் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டார் என்று குறிப்பிடுகிறார்களேயன்றி கூடன்குளம் குறித்து அவர் பேசியதை மறைத்து விட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் பேசியது தவறு என்று கண்டிக்கிறார்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், மக்களவை உறுப்பினர் கனிமொழி   அவர்களும். திடீர் தமிழ் பாசம் வந்து துடிக்கின்றது தமிழக காங்கிரஸ்.

பிப்ரவரி 24, 2012 அன்று அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், "இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கூடன்குளத்தில் போராட்டம் செய்பவர்களை அமெரிக்க என் ஜி ஓ க்கள் நிதி அளித்து தூண்டி விடுகிறார்கள்" என்று  கூறியதை மறந்து விட்டு இன்று நீலிக்கண்ணீர் வடிப்பது கடும் கண்டனத்திற்குரியது. 
அதே போல் தி மு க தலைவர் கருணாநிதி அவர்களும், பிப்ரவரி, 29, 2012 அன்று கூடன்குளம் போராட்டத்திற்கு அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் தான் காரணம் என்று கூறியதையும், அ தி மு க அரசு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறியதையும்  மு.க.ஸ்டாலின் அவர்களால் மறுக்க முடியுமா?

அப்படியென்றால், கூடங்குளத்தில் போராடியவர்கள் தேசத்துரோகிகள் என்று சொல்கிறதா தி மு க? அமெரிக்க நிதியினால் தூண்டப்பட்டதால் தான் போராட்டம் நடைபெற்றது என்று ஏற்றுக்கொள்கிறாரா மு.க.ஸ்டாலின் அவர்கள்? 

எதிர்க்கட்சியாக இருந்த���ல் போராட்டக்காரர்கள் தேச பக்தர்கள் என்றும் ஆளும்கட்சியாக இருந்தால் போராட்டக்காரர்கள் தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்துவது மலிவான அரசியல் மட்டுமல்ல ஆபத்தான அரசியலும் கூட. மன்மோகன் சிங் கூறினால் சரி, ஆர்.என்.ரவி கூறினால் தவறா? 

எந்த ஆதாரத்தை கொண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் கூடன்குளம் போராட்டத்தை தூண்ட வெளிநாட்டு நிதி தான் பயன்பட்டது என்று கூறினார் என்பதை அன்று மத்திய அமைச்சரவையில் இருந்த 
திமுக வின்  தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

சமீபத்திய செய்திகள்

news

வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!

news

கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!

news

கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள‌..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!

news

கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு

news

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை

news

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!

news

கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி

news

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்

news

தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்