11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு எம்.பி.க்கு தேசிய விருது!

May 19, 2025,01:09 PM IST

சென்னை: நாடாளுமன்றத்தில்  11 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டு எம்.பி. சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கப்பட உள்ளது.


நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி. உள்ளிட்ட 17 எம்.பி.க்கள் சன்சத் ரத்னா 2025 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் நிறுவப்பட்ட இந்த விருதுக்கு, தகுதியான எம்.பி.க்களை தேசிய பிற்படுத்த்பட்டோர் ஆணையம் தேர்வு செய்தது. ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறும் சன்சத் ரத்னா விருதளிப்பு குழுவின் 15ம் ஆண்டு விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன. தனிநபர் பிரிவில் 17 எம்.பி.க்களுக்கும், சிறப்புப் பிரிவில் 4 பேரும் தேர்வு செய்யப்பட்டு விருது பெறவுள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசனையின் பேரில் சன்சத் ரத்னா விருதுகள் முதல்முறையாக 2010ம் ஆண்டில் பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை மற்றும் இ- பத்திரிகையான பிரீசென்ஸ் ஆகியவற்றால் நிறுவப்பட்டன. முதல் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.


இது குறித்து பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாடாளுமன்றத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் 17 எம்.பி.க்கள் நிகழாண்டுக்கான சன்சத் விருதுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மஹ்தாப் மற்றும் சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு) என்.கே.ரேமசாந்திரன் (புரட்சிகர சோஷலிஸ கட்சி), ஸ்ரீரங் பார்னே (சிவசேனை ஷிண்டே பிரிவு) ஆகிய 4 எம்.பி.க்கள் 16,17,வது மற்றும் 18வது மக்களவையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே இவர்கள் நால்வருக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு சிறப்பான மற்றும் தொடர்ச்சியான பங்களிப்பு என்று விருது வழங்கப்பட உள்ளது.




இவர்கள் தவிர ஸ்மிதா வாக் - பாஜக,  அரவிந்த் சாவந்த் - சிவசேனை உத்தவ் பிரிவு, நரேஷ் கன்பத் - சிவசேனை ஷிண்டே பிரிவு, வர்ஷா கெய்க்வாட் - காங்கிரஸ், மேதா குல்கர்னி - பாஜக, பிரவீன் படேல் - பாஜக, ரவி கிஷன் - பாஜக, நிதி காந்த் துபே - பாஜக, வித்யுத் பாரன் மஹாதே - பாஜக, பிபி சவுத்ரி - பாஜக, மதன் ரத்தோர் - பாஜக, சி.என்.அண்ணாதுரை - திமுக மற்றும் திலீப் சைகியா - பாஜக ஆகியோரும் சன்சத் ரத்னா விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


நாடாளுமன்றத்தில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய நிதி மற்றும் வேளாண்மை நிலை குழுக்களுக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் விழா ஜூலை இறுதியில் புது டெல்லியில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை: விசிக தலைவர் திருமாவளவன்!

news

தமிழகத்தில் இயல்பை விட 90 % அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!

news

Healthy Food Habits: உணவு பழக்கமும் பழமொழியும் .. "உஷ்ணம் தவிர்க்க கம்மங் களி"

news

Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?

news

Yellow Alert: பெங்களூருவில் தொடரும் கன மழை.. இன்று 23 மாவட்டங்களில் மழை கொட்டும்!

news

வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!

news

மீண்டும் மீண்டுமா.. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

news

வேளாண்துறை வீழ்ச்சி தான் திமுக ஆட்சியின் சாதனையா?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்