நீட் நுழைவு தேர்வு அறிவிப்பு: எப்போது தேர்வு.. எப்படி விண்ணப்பிப்பது.. முழு விவரம்!

Feb 10, 2024,05:16 PM IST

சென்னை: 2024 ஆண்டுக்கான இளங்கலை நீட்தேர்வு நாடு முழுவதும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.


2024 ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அது குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளதாகவும், இந்த தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது


www.nta.ac.in, https://exams.nta.ac.in/NEET  இணையதளம் மூலம் ஆன்லைனில் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


இது குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:




நீட் தேர்வு அஸ்ஸாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படும். நீட் தேர்வு எழுதுவதற்கு ஆன்லைன் மூலமாக பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.1700. ஓ. பி. சி பிரிவினருக்கு ரூ. 1600, மூன்றாம் பாலினத்தவற்கு ரூ.1000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 9, 2024  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


12ம் வகுப்பு தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது முடிவுகள் எதிர்பார்க்கப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தனி தேர்வுகளாக தேர்ச்சி பெற்றவர்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு பங்கேற்க தகுதி உள்ளவர்கள். 


தேர்வு மே 5.2014 அன்று நடத்தப்படும். தேர்வு நேரம்3 மணி 20 நிமிடங்கள்  நீட் யுஜிசிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும். மேலும், தொடர்புடைய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணைய வலைதளத்தைப் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Vizhinjam Port: விழிஞ்ஞம் துறைமுகம்.. இந்தியா மற்றும் கேரளாவின் வர்த்தக வளர்ச்சியில் புது அத்தியாயம்

news

நேஷனல் ஹெரால்டு வழக்கில்.. சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு.. டெல்லி கோர்ட் நோட்டீஸ்

news

3, 5,8 வகுப்பு மாணவர்களை.. fail ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

news

பாகிஸ்தான் வான்வெளி மூடப்படுவதால்.. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு $600 மில்லியன் இழப்பு!

news

வெயிலிலிருந்து தப்ப.. நீண்ட நேரம் AC இயக்கினால்.. என்னென்ன பிரச்சினையெல்லாம் வரும் தெரியுமா?

news

மதுரை சித்திரை திருவிழா... 4ம் தேதி முதல் பொருட்காட்சி.. 45 நாட்களுக்கு!

news

என் இதயமே.. மீண்டும் ஒரு காதல் கதையில் ஷிகர் தவான்.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்துகள்!

news

பயணிகளின் கோரிக்கையை ஏற்று.. புறநகர் ஏசி ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தெற்கு ரயில்வே!

news

வாழ்த்து மழையில் நனையும்‌.. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்.. கொண்டாடும் ரசிகர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்