சென்னை: 2024 ஆண்டுக்கான இளங்கலை நீட்தேர்வு நாடு முழுவதும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அது குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளதாகவும், இந்த தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
www.nta.ac.in, https://exams.nta.ac.in/NEET இணையதளம் மூலம் ஆன்லைனில் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நீட் தேர்வு அஸ்ஸாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படும். நீட் தேர்வு எழுதுவதற்கு ஆன்லைன் மூலமாக பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.1700. ஓ. பி. சி பிரிவினருக்கு ரூ. 1600, மூன்றாம் பாலினத்தவற்கு ரூ.1000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 9, 2024 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது முடிவுகள் எதிர்பார்க்கப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தனி தேர்வுகளாக தேர்ச்சி பெற்றவர்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு பங்கேற்க தகுதி உள்ளவர்கள்.
தேர்வு மே 5.2014 அன்று நடத்தப்படும். தேர்வு நேரம்3 மணி 20 நிமிடங்கள் நீட் யுஜிசிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும். மேலும், தொடர்புடைய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணைய வலைதளத்தைப் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}