சென்னை: யூடியூப் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் பதிவேற்றம், குறைந்த தரம், செயற்கை நுண்ணறிவு வீடியோக்களுக்கு வருமானம் இல்லை. அசல் உள்ளடக்கத்துக்கு மட்டுமே இனி வருவாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. யூடியூப் குறுகிய காலத்தில் புகழையும், வருமானத்தையும் அள்ளிக் கொடுப்பதால் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான யூடியூப் சேனல்கள் முளைத்து வருகின்றன. அதே நேரம் வருமானத்தை பெருக்குவதற்காக பல்வேறு நூதன யுக்திகளை பின்பற்றி காப்பி போஸ்ட் வீடியோக்களும், ஏஐ தொழிநுட்பத்திலும் அதிகப்படியான வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அதுமட்டும் இன்றி இணைய தளங்கள் மூலம் எந்தவொரு சிரமமுமின்றி, சில நிமிடங்களிலேயே வீடியோக்களை உருவாக்கி பலர் பதிவிட்டு காசு பார்த்து வருகின்றனர்.

இதற்கெல்லாம் தற்போது முற்றுபுள்ளி வந்து விட்டது என்றே சொல்லலாம். பொதுவாக youtube சேனல்கள் வருமானம் ஈட்டுவதற்கு தகுதியாக ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ், ஓராண்டில் நான்காயிரம் மணி நேரம் வாட்ச் ஹவர்ஸ் அல்லது மூன்று மாதத்தில் ஒரு கோடி ஷார்ட்ஸ் வீடியோ பார்வைகளை பெற வேண்டும் என்ற விதி வழக்கத்தில் இருந்தது. இனி இது மட்டுமே வருமானம் ஈட்டுவதற்கான தகுதியாக கருதப்படாது என்று புதிய விதிமுறைகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதே போல் ஒருவர் போட்ட வீடியோவுக்கு ரியாக்ஷன் வீடியோ உருவாக்கும் போது அதில் கிரியேட்டரின் புதிய முயற்சியும் பங்கும் அதிகம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பார்வையாளர்களை பெறுவதை தாண்டி பொழுதுபோக்கு அல்லது கல்வி சார்ந்ததாக இருந்தால் மட்டுமே இனி வருமானம் கிடைக்குமாம். பல வீடியோக்களில் இருந்து தொகுக்கப்படும் காம்பிளேஷன் வீடியோக்களை உருவாக்கினால் அதில் கிரியேட்டரின் பங்கு அதிகம் இருக்க வேண்டுமாம்.
உதாரணமாக ஏஐ பற்றி வீடியோக்களை உருவாக்கும் போது வீடியோவில் ஒரு சில ஏஐ புகைப்படம் அல்லது வீடியோவை குறைவான அளவு பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது. அதனை விடுத்து வீடியோ முழுவதும் ஏஐ முறையில் வீடியோவை உருவாக்கினால் அதற்கு வருமானம் கிடைக்காதாம். அதே போல தரம் குறைந்த வீடியோக்களுக்கும் பணம் கிடைக்காதாம். தங்களது சொந்த முயற்சியில் உருவாக்கும் வீடியோக்களுக்கு மட்டுமே ப்ரொமொட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறுமனே வருமானம் ஈட்டும் நோக்கத்திற்காக உருவாக்கப்படுவதை தடுக்கவே விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}