டெல்லி: பிப்ரவரி 14ம் தேதி பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கடைப்பிடிக்குமாறு விடுத்த அழைப்பை இந்திய விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து அதை திரும்பப் பெற்றுள்ளதாக தெரிகிறது.
பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் தடபுடலாக தயாராகி வருகிறார்கள். தற்போது காதலர் தின வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு தினத்தைக் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், பிப்ரவரி 14ம் தேதி பசுக்களை கட்டி அணைக்கும் தினமாக கொண்டாடுமாறு அதில் அறிவுறுத்தியிருந்தது. இப்படி அணைப்பதன் மூலம் உணர்வுகள் அதிகரிக்கும், தனிப்பட்ட முறையிலும், ஒட்டுமொத்தமாகவும் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்றும் அது கூறியிருந்தது.
இது பெரும் சலசலப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது. பசுக்களை கட்டி அணைப்பது தொடர்பாக பலர் கேலி செய்து வந்தனர். கிண்டல் மீம்ஸ்களும் கொடி கட்டிப் பறந்தன. பசுக்களைப் போலவே காளைகளை கட்டி அணைக்கவும் மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இதுகுறித்து பீட்டாவுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் கிளம்பின.
இந்தச் சூழ்நிலையில் தற்போது இந்த அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வாரிய செயலாளர் எஸ்.கே.தத்தா வெளியிட்டுள்ளார். இவர்தான் பசுக்களை கட்டி அணைக்கும் தினமாக கொண்டாடுமாறு அறிவிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}