டெல்லி: பிப்ரவரி 14ம் தேதி பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கடைப்பிடிக்குமாறு விடுத்த அழைப்பை இந்திய விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து அதை திரும்பப் பெற்றுள்ளதாக தெரிகிறது.
பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் தடபுடலாக தயாராகி வருகிறார்கள். தற்போது காதலர் தின வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு தினத்தைக் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், பிப்ரவரி 14ம் தேதி பசுக்களை கட்டி அணைக்கும் தினமாக கொண்டாடுமாறு அதில் அறிவுறுத்தியிருந்தது. இப்படி அணைப்பதன் மூலம் உணர்வுகள் அதிகரிக்கும், தனிப்பட்ட முறையிலும், ஒட்டுமொத்தமாகவும் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்றும் அது கூறியிருந்தது.
இது பெரும் சலசலப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது. பசுக்களை கட்டி அணைப்பது தொடர்பாக பலர் கேலி செய்து வந்தனர். கிண்டல் மீம்ஸ்களும் கொடி கட்டிப் பறந்தன. பசுக்களைப் போலவே காளைகளை கட்டி அணைக்கவும் மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இதுகுறித்து பீட்டாவுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் கிளம்பின.
இந்தச் சூழ்நிலையில் தற்போது இந்த அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வாரிய செயலாளர் எஸ்.கே.தத்தா வெளியிட்டுள்ளார். இவர்தான் பசுக்களை கட்டி அணைக்கும் தினமாக கொண்டாடுமாறு அறிவிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}