திருநள்ளாறு: வரும் மார்ச் 29ம் தேதி சனிப்பெர்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி கிடையாது என்ற அதிர்ச்சி தகவலை திருநள்ளாறு கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இருந்து ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைந்து செல்வது வழக்கமான ஒன்று தான். இருந்தாலும் கிரகங்களின் இந்த ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஜோதிட ரீதியாக கிரகப் பெயர்ச்சி என்பது மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கிரகங்களிலேயே அனைவரையும் நடுங்க வைக்கும் கிரகம் என்றால் அது சனி கிரகம் தான்.
ஜோதிட ரீதியாக சனி பகவானை மந்தகாரகன் என்று அழைக்கிறார்கள். மெதுவாக நகரமும் கிரகமான சனி பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவதற்கு இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். "சனியை போல் கொடுப்பவரும் இல்லை; கெடுப்பவரும் இல்லை", "குரு கொடுப்பதை சனி தடுப்பார்; சனி கொடுத்தால் எவர் தடுப்பார்" ஆகியன சனியின் ஆற்றலை சொல்வதற்காக ஜோதிடர்கள் கூறும் மொழியாகும். சனி பகவான் எந்த அளவிற்கு கெடு பலன்களை தருகிறாரோ, அதை விட பல மடங்கு அதிகமான நன்மைகளையும் வழங்கக் கூடியவர்.
தற்போது கும்ப ராசியில் இருந்து வரும் சனி பகவான், வரும் மார்ச் 29ம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக சனிப் பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் அனுபவிக்க போகும் சாதக பாதகங்கள் பற்றிய பலன்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதே போல் சனிப் பெயர்ச்சியில் பாதிப்பை சந்திக்க போகும் ராசிகள் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்ற தகவல்களும் சமூக வளைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இதற்கிடையில் சனிப் பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் பல சனி பகவான் சிறப்புக்குரிய தலங்களில் நடைபெற்று வருகிறது. ஆனால் சனி பகவானுக்குரிய முக்கிய பரிகார தலமாக விளங்கும் திருநள்ளாறில் எந்த ஏற்பாடும் நடைபெறவில்லை. இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது, மார்ச் 29ம் தேதி சனிப் பெயர்ச்சி கிடையாது. வாக்கிய கணித பஞ்சாங்கத்தின் படி, 2025ம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி என்பது கிடையாது. 2026ம் ஆண்டில் தான் சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இதனால் திருக்கணித பஞ்சாங்கத்தை பின்பற்றி மற்ற கோவில்களில் மார்ச் 29ம் தேதி நடைபெறலாம் என சொல்லப்படுகிறது. அதே சமயம் திருநள்ளாறில் 2026ல் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என தெரிகிறது.
கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!
தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்
மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!
உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி
{{comments.comment}}