சென்னை: அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்தித்தாக ஊடகங்கள் எழுதுவது சரியில்லை. சந்தித்தால் சந்தித்தேன் என்று சொல்லப் போறேன்.. இதில் என்ன பயம், தயக்கம் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் பல்வேறு அதிரடிகள் அரங்கேறி வருகின்றன. அதிமுக தரப்பிலிருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். இதனால் மீண்டும் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படப் போவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.
மறுபக்கம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அதேபோல சி.வி.சண்முகம், அமித்ஷாவைச் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இடையில், அண்ணாமலையை மாற்றப் போவதாக மீண்டும் பரபரப்பு கிளம்பியது. 11ம் தேதிக்குப் பிறகு அண்ணாமலை மாற்றம் நிச்சயம் என்றும் செய்திகள் கூறுகின்றன. அவரும் தலைவர் பதவியெல்லாம் வெங்காயம் என்று பேசி வருகிறார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தாக தகவல்கள் வெளியாகின. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சீமான், ஏன் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் என்ற விவாதமும் கிளம்பியது. ஆனால் இந்த செய்திகளை சீமான் மறுத்துள்ளார்.
இதுகுறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சந்தித்தால் சந்தித்தேன் என்று சொல்லப் போறேன். எனக்கென்ன பயமா.. தயக்கமா. சந்திச்சால் சந்திச்சேன் அப்படின்னு சொல்வேன். நீங்களாக சந்திச்சாரா என்று பேசுவது சரியில்லை. ரஜினிகாந்த் என்ன பாஜகவா. அன்பின் நிமித்தமாக அவரை சந்தித்தேன் பேசினேன். சந்தித்ததையும் நானே சொன்னேன். எனவே நீங்களாக கற்பனை செய்யாதீர்கள்.
தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவேன் அப்படின்னு ஏற்கனவே சொல்லிட்டேன். அப்படி இறுக்கும்போது கூட்டணி வைப்பதாக இருந்தால் நான் ஏன் வேட்பாளரை அறிவிக்கப் போறேன் என்று கேட்டுள்ளார் சீமான்.
அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!
தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி
தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?
தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி
பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!
சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
{{comments.comment}}