சென்னை: வார இறுதி நாட்கள், மிலாடி நபி என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்சம் 2000 ரூபாய் முதல் அதிகபட்சம் 4,500 வரை கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் சென்னையிலிருந்து செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
வார இறுதி நாட்கள், மிலாடி நபி என தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை என்பதாலும் சுபமுகூர்த்த தினம் என்பதாலும் மக்கள் அதிகளவில் வெளியூர்களுக்கு பயணித்து வருகின்றனர். அதேபோல் தொடர் விடுமுறை நாட்கள் வந்தாலே மக்கள் வீடுகளில் இல்லாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் பொழுதுகளை கழித்து வருகின்றனர் . இதனை கருத்தில் கொண்டு இந்த தொடர் விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்கள் பாதுகாப்புடன் பயணிக்கவும் அரசு சார்பில் கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. முன்பதிவு சேவைகளையும் செயல்படுத்தி வருகிறது.

ஆனால் ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்யாதவர்கள் மற்றும் இறுதி நேரத்தில் கட்டணம் கிடைக்காதவர்கள் தனியார் பேருந்துகளை நாடி வருகின்றனர். இதனால் தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசலும் அலை மோதுகின்றன. இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல குறைந்தபட்சம் ரூபாய் 1,900 முதல் அதிகபட்சம் 4,000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல குறைந்தபட்சம் ரூபாய் 2500 முதல் அதிகபட்சமாக 4500 வரையும், நெல்லை செல்ல குறைந்தபட்சம் ரூபாய் 2000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 4200 வரையும் டிக்கெட்டி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல குறைந்தபட்சம் ரூபாய் 2000 முதல் அதிகபட்சம் 4,500 வரை டிக்கெட் விலை நிர்ணைக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. அரசு உடனடியாக தலையிட்டு இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}