சியோல்: போதைப் பொருள் வழக்கில் சிக்கியிருந்த தென்கொரியா நடிகர் லீ சுன் கியூன் இறந்த நிலையில் ஒரு காரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை மூலம் தனது உயிரை போக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆஸ்கர் விருது பெற்ற படம்தான் பாராசைட். இதில் நடித்திருந்தவர் லீ சுன் கியூன். இப்படத்தில் இவரது நடிப்பு அபாரமாக இருந்தது. பலரையும் கவர்ந்த நடிகர் இவர்.
இந்த நிலையில் மத்திய சியோல் நகரில் உள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில், லீயின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடிகர் லீ போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் சிக்கியிருந்தார். அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. விசாரணையிலும் இருந்து வந்தார். இந்த நிலையில்தான் அவரது மரணம் வந்துள்ளது.
மிகப் பெரிய அளவிலான ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் லீ. ஆனால் அவரது போதைப் பொருள் பழக்கம் அவரது பெயரைக் கெடுத்து விட்டது. அவருக்கான பட வாய்ப்புகள் நின்று போயின. டிவி தொடர்களிலும் அவர் நீக்கப்பட்டார். விளம்பரங்களிலிருந்தும் நீக்கப்பட்டார்.
அனைத்து வகையிலும் புறக்கணிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டதால் விரக்தி அடைந்து லீ தற்கொலைக்கு முடிவு செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. லீ சுன் கியூனின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}