சென்னை: இயக்குநர் அமீர் சொன்ன பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்ன.. பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்காக என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டுள்ளார் இயக்குநர் சசிக்குமார்.
பருத்தி வீரன் பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது போல. இயக்குநர் அமீர் மீதான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் கருத்துக்கள் திரையுலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. இயக்குநர்கள் பலரும் அமீருக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு வந்தனர். இதன் உச்சமாக மூத்த இயக்குநர் பாரதிராஜா நேற்று காட்டமான அறிக்கை ஒன்றை விட்டார்.
இந்த அறிக்கையின் எதிரொலியாக இன்று காலை வருத்தம் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டிருந்தார் ஞானவேல்ராஜா. அதில் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக அமீர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறினார். நான் பதில் அளித்தபோது சில வார்த்தைகளை குறிப்பிட்டேன். அது அவரை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டு முடித்துக் கொண்டு விட்டார்.

இப்போது இந்த பொத்தாம் பொதுவான அறிக்கைக்கு கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. இயக்குநர் சசிக்குமார் முதல் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது
அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?
"நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்" என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன?
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு? என்று கேட்டுள்ளார் சசிக்குமார்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}