சென்னை: இயக்குநர் அமீர் சொன்ன பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்ன.. பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்காக என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டுள்ளார் இயக்குநர் சசிக்குமார்.
பருத்தி வீரன் பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது போல. இயக்குநர் அமீர் மீதான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் கருத்துக்கள் திரையுலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. இயக்குநர்கள் பலரும் அமீருக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு வந்தனர். இதன் உச்சமாக மூத்த இயக்குநர் பாரதிராஜா நேற்று காட்டமான அறிக்கை ஒன்றை விட்டார்.
இந்த அறிக்கையின் எதிரொலியாக இன்று காலை வருத்தம் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டிருந்தார் ஞானவேல்ராஜா. அதில் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக அமீர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறினார். நான் பதில் அளித்தபோது சில வார்த்தைகளை குறிப்பிட்டேன். அது அவரை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டு முடித்துக் கொண்டு விட்டார்.

இப்போது இந்த பொத்தாம் பொதுவான அறிக்கைக்கு கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. இயக்குநர் சசிக்குமார் முதல் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது
அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?
"நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்" என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன?
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு? என்று கேட்டுள்ளார் சசிக்குமார்.
அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!
தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி
தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?
தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி
பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!
சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
{{comments.comment}}