சென்னை: இயக்குநர் அமீர் சொன்ன பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்ன.. பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்காக என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டுள்ளார் இயக்குநர் சசிக்குமார்.
பருத்தி வீரன் பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது போல. இயக்குநர் அமீர் மீதான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் கருத்துக்கள் திரையுலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. இயக்குநர்கள் பலரும் அமீருக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு வந்தனர். இதன் உச்சமாக மூத்த இயக்குநர் பாரதிராஜா நேற்று காட்டமான அறிக்கை ஒன்றை விட்டார்.
இந்த அறிக்கையின் எதிரொலியாக இன்று காலை வருத்தம் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டிருந்தார் ஞானவேல்ராஜா. அதில் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக அமீர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறினார். நான் பதில் அளித்தபோது சில வார்த்தைகளை குறிப்பிட்டேன். அது அவரை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டு முடித்துக் கொண்டு விட்டார்.

இப்போது இந்த பொத்தாம் பொதுவான அறிக்கைக்கு கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. இயக்குநர் சசிக்குமார் முதல் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது
அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?
"நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்" என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன?
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு? என்று கேட்டுள்ளார் சசிக்குமார்.
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
{{comments.comment}}