எந்தன் முருகன்!

Aug 03, 2026,04:56 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


கோயில் கோயில் ஆகச் சென்று 

வந்ததில்லை ஆனாலும் எந்தன் 

குமரன் எனக்குக் குறை

ஒன்றும் வைத்ததில்லை! 


ஆதி சிவன் மகன் தன்னை அப்படி  

ஒன்றும் நான் தொழுததில்லை!

இருப்பினும் அவன் காட்டிய

அன்புக்கு ஈடு இணை இல்லை! 


விரதங்கள் என்று எதுவும் நான் 

இருந்ததில்லை! ஆனாலும் அவன் 

எனக்கு உதவாமல் 

ஒரு போதும் இருந்ததில்லை! 


வேண்டுதல் என்று எதுவும் நான் 

வைத்ததில்லை! இருப்பினும்

எனக்கவன் அருளியதில்

எந்தக் குறையும் இல்லை! 




கோடி கோடியாகத் திருப்பணி

செய்யப் பணம் என்னிடம் இல்லை

ஆனால் அவன் அன்பைத் தவிரக்

கோடிகளை  எதிர்பார்ப்பதில்லை!


குற்றம் குறைகள் என்னிடம் 

இருந்தாலும் அவன் தாயுள்ளம்

என்னை ஒருபோதும் 

வெறுத்ததில்லை! 


புண்ணியம் 

செய்திருப்பேனோ

என்றால் அப்படியும் 

தெரியவில்லை! 


ஆனாலும் என்னோடு 

இருக்கிறான்!

அதுதான் அவனின்

அன்பின் எல்லை!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

news

Short Story: ஒரு பெரிய கெடா பூனை!

news

முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!

news

மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

அதிகம் பார்க்கும் செய்திகள்